செவ்வாய், 15 மார்ச், 2011

63 நாயன்மார்களும், 63 தொகுதிகளும்!


“காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்கள் வந்திருக்கின்றன. அவர்கள் இதை நல்ல எண்ணத்தோடு, பக்தி மனப்பான்மை யோடு வரவேற்பார்கள் என்று எண்ணு கிறேன். ஏனென்றால் புராணத்திலே 63 நாயன்மார் என்பார்களே அந்த 63 நாயன் மார்களை இன்றைக்கு காங்கிரசார் இந்தக் கூட்டணியிலே பெற்றிருக்கிறார்கள் என் பதற்காக அவர்களுக்கு என்னுடைய வாழ்த்து”

திமுக தலைவரும், முதல்வருமான கலைஞர் வேறு வழியின்றி திமுக 63 இடங்களை தமிழக காங்கிரசில் உள்ள பல்வேறு கோஷ்டிகளுக்கு கொடுத்த பிறகு வெளியிட்ட வேதனை வார்த்தை கள் இவை. அவர் குறிப்பிடுகிற 63 நாயன் மார்களைப் பற்றி பெரிய புராணத்தில் சேக்கிழார் பாடியுள்ளார். இந்தப்பெரிய புராணத்தையும், ராமாயணத்தையும் கொளுத்த வேண்டும் என்று திமுகவைத் துவக்கிய அண்ணா ஒரு காலத்தில் வாதா டினார். அந்த உரை கூட “தீ பரவட்டும்” என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.

நாயன்மார்கள் மொத்தம் 72 பேர், 63 பேர் தனி அடியார்கள் என்றும் 9 குழுவினர் தொகையடியார்கள் என்றும் அழைக்கப் படுகின்றனர். நல்லவேளை தனியடியார் களுக்கு மட்டும் ஒதுக்கீடு முடிந்திருக் கிறது. காங்கிரசில் உள்ள கோஷ்டிக ளுக்கு ஏற்ப தொகையடியார்களுக்கும் சேர்த்து தொகுதிகள் கேட்டிருந்தால் 72 தொகுதிகளை திமுக இழக்க வேண்டி வந்திருக்கும்.

திருத்தொண்டர் புராணம் என்ற பெயரில் அரங்கேற்றப்பட்ட பெரிய புரா ணத்தில் பேசப்படும் நாயன்மார்களின் வர லாற்றை படித்துப்பார்த்தால் பெரும்பா லான நாயன்மார்கள் பக்தியின் பெயரால் மோசடி செய்யப்பட்டவர்களாக, வஞ்சிக் கப்பட்டவர்களாக இருப்பதைத்தான் பார்க்க முடிகிறது.

திருநீலகண்டர் எனும் நாயன்மார் சிவனடியார்களுக்கு திருவோடு செய்து தருவதையே திருப்பணியாக செய்து வந்தாராம். தேர்தல் முடிவில் யாருக்கு யார் திருவோடு தரப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

இளையான்குடி மாறநாயனார் என்ப வர் சிவனடியார்களுக்கு உணவு படைப் பதையே பெரும்பேறாகக் கருதினாராம். ஒரு மழைநாள் நள்ளிரவில் இளையான் குடி மாறநாயனார் கடும்பசியோடு படுத் திருந்த வேளையில், சிவனடியார் ஒருவர் அவரது வீட்டுக்கு வந்தாராம். வீட்டில் சமைக்க எதுவுமே இல்லாததால் காலை யில் நாற்றங்காலில் தூவிய விதை நெல் லை வாரிக்கொண்டு வந்து அதை அரிசி யாக்கி சமைத்து உணவு படைத்தார்களாம். தமிழகத்தில் தகுதிக்கு அதிகமாக 63 தொகு திகளை பெற்றதன் மூலம் திமுகவின் விதை நெல்லையும் காங்கிரஸ் பறிமுதல் செய்துள்ளது என்பதைத்தான் கலைஞர் சூசகமாகக் குறிப்பிடுகிறாரோ என்னவோ.

மெய்ப்பொருள் நாயனார் ஒரு மன்னர், அவருடைய எதிரியான முத்தநாதன் சிவனடியார் வேடத்தை போலியாகப் புனைந்து வந்து மெய்ப்பொருள் நாயனாரை வஞ்சம் தீர்த்தாராம். அன்றைக்கு சிவனடியார் வேடத்தில் வந்தது போல இன்றைக்கு சிபிஐ உருவத்தில் வந்து காரியத்தைச் சாதித்திருக்கிறார்கள்.

பூசலார் நாயனார் இதயத்திலேயே இறைவனுக்கு கோவில் கட்டியவர். கலை ஞரும் தொகுதி கிடைக்காதவர்களைப் பார்த்து, என் இதயத்திலே இடம் உண்டு என்று அவ்வப்போது கூறுவார். பூசலார் நாயனாரைப்போல இதயத்தில் மட்டும் இடம் தருவதாக இருந்தால் 234 தொகுதி களையும் காங்கிரசுக்கே திமுக ஒதுக்கி யிருக்கும். ஆனால் அவர்களோ இதயத் தை ரணப்படுத்தி தொகுதிகளை பெற்றி ருக்கிறார்கள்.

கண்ணப்ப நாயனார் தன்னுடைய கண்களையே லிங்கத்தின் சிலைக்கு கொடுத்திருக்கிறார். மூர்த்தி நாயனார் சந்தனக்கட்டைக்குப் பஞ்சம் வந்த போது தனது முழங்கையையே தேய்த்து இறைவனுக்கு சந்தனக்காப்பு இட்டாராம்.

கணம்புல்ல நாயனார் தமது தலைமுடி யை எரித்து சிவனுக்கு தீவட்டி ஏந்தினா ராம். இப்படி எந்த நாயனாரின் வரலாற்றை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் கடவு ளின் பெயரால் ஏமாற்றப்பட்டவர்களாக, வஞ்சிக் கப்பட்டவர்களாக இருப்பதையே பார்க்க முடிகிறது.

திருநாளைப்போவார் என்றழைக்கப் பட்ட நந்தனார் சரித்திரமும் பெரிய புராணத்தில்தான் வருகிறது. 63 நாயன் மார்களில் அவரும் ஒருவர். பெரிய புரா ணத்தில் மூவாயிரம் தில்லைவாழ் அந்த ணர்கள்தான் முதல் நாயனார்கள் என்று குறிக்கப்படுகிறார்கள். அவர்கள்தான் தில்லை நடராஜரை தரிசிக்க ஆசைப் பட்ட நந்தனாரை தீயில் இறக்கிக் கொன்ற வர்கள். அவர் கோவிலுக்குச் சென்ற வாசல் இன்னமும் அடைக்கப்பட்டுக் கிடக்கிறது. அதைத் திறந்துவிடுமாறு தீண் டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம் நடத்தியபோது, நீங்கள்தான் நந்தனார் உள்ளே சென்றபோது வெற்றிலைபாக்கு கொடுத்து அனுப்பி வைத்தீர்களா என்று கிண்டலாகக் கேட்டார் முதல்வர். நந்தனா ரின் வாரிசுகள் இன்னமும் கூட பல கோயில்களுக்குள் அனுமதிக்கப்படா மல் வெளியில்தான் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டிய திமுக அரசு, பல சமயங்களில் ஆதிக்கச் சக்திகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டது. இப்போது 63 தொகுதி களை மிரட்டிப் பறித்த நிலையில் பெரிய புராணத்தையும் துணைக்கழைக்க வேண்டிய பரிதாப நிலையில் திமுக நிற்கிறது.

காங்கிரசார் இதை பக்திமனப்பான்மை யோடு ஏற்பார்கள் என்று முதல்வர் கூறி யிருந்தாலும் குரூரப்புத்தியோடு அவர்கள் கேட்கும் தொகுதிகளைத்தான் ஒதுக்க வேண்டும் என்றல்லவா நிர்ப்பந்தம் செய்து வருகிறார்கள்.

60 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்தபோதும் கூடுதலாக மூன்று தொகுதிகளைக் கேட்டு நெருக்கடி கொடுத் துள்ளது காங்கிரஸ். மூன்று என்ற எழுத்துக்கு அன்பு, அறிவு, தமிழ், அண்ணா என்று எத்தனை சிறப்புகள் உண்டு என்று கலைஞர் அடுக்குவதுண்டு. ஆனால் இப்போது ஊழல், சிபிஐ, ரெய்டு என்ற மூன்றெழுத்துக்களை காட்டியே, மூன்று தொகுதிகளை பெற்றிருக்கிறது காங்கிரஸ்.

மதுரை சொக்கன்

கருத்துகள் இல்லை: