செவ்வாய், 8 மார்ச், 2011

சுற்றுச் சூழல் அபாயத்திற்கு முதலாளித்துவமே காரணம் அகமதி நிஜாத் குற்றச்சாட்டு



இயற்கை வளங்கள் குறித்த கருத்தரங்கு ஒன்றில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இத்தகைய கொள்கைகள் மற்றும் அதை படு தீவிரமாக நடைமுறைப்படுத்தி வரும் அமெரிக்கா ஆகியவையே இந்த நிலைமைக்குக் கார ணம் என்று குற்றம் சாட் டினார்.

மேலும் பேசிய அவர், உலகில் உள்ள 95 விழுக்காடு மக்கள் சுற்றுச் சூழல் நெருக் கடியை சமாளிக்க சீர்திருத் தங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஐந்து விழுக் காட்டைக் கையில் வைத் திருக்கும் அமெரிக்கா, 95 விழுக்காடு சேதத்தை உண் டாக்கி வருகிறது. கியோட் டோ உடன்பாட்டில் கை யெழுத்திடாத சில நாடு களில் அமெரிக்காவும் ஒன் றாகும். வெப்ப மயமாத லைத் தடுக்கவும், பசுமைக் குடில் வாயுக்கள் வெளியேற் றத்தைக் குறைக்கவும் இந்த உடன்பாடு எட்டப்பட் டது. உலகிலேயே அதிக மான அளவில் பசுமைக் குடில் வாயுக்களை வெளி யேற்றும் முதல் பத்து நாடு களில் அமெரிக்காவும் ஒன் றாகும்.

பெர்சிய வளைகுடா பகுதியை மாசடையச் செய் ததிலும் அமெரிக்காவுக்குப் பெரும் பங்கு உண்டு. ஆப் கானிஸ்தான் மற்றும் இராக் கில் உள்ள அமெரிக்கப் படைகள் வளைகுடா கடல் பகுதியைப் பாழாக்கி வரு கின்றன. இப்படைகளின் வசம் இருக்கும் போர்க்கப் பல்களினாலேயே இந்த சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த சுற்றுப்புற சீர்கேடு களில் இருந்து மீள குறைந் தது ஐம்பது ஆண்டுகளா வது ஆகும். சுற்றுப் புற சூழ லுக்கு பெரும் கேடு ஏற் படுத்தும் நாடுகளில் பெரும் பாலானவை முதலாளித் துவக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் நாடுகளா கும். அனைத்து நாடுகளுக் கும் ஒரு பொதுவான உறுதி மொழியைத் தர வேண்டும். இத்தகைய பொதுவான உறுதிமொழியைப் பெறு வதில் ஐக்கிய நாடுகள் சபை முன்முயற்சி எடுக்க வேண் டும் என்று குறிப்பிட்டார்.

சுற்றுச் சூழல் அபா யத்தை எதிர்கொள்ள எடுக் கப்படும் ஒவ்வொரு முயற் சியும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் தடுத்து நிறுத்தப்படுகிறது. இத்தகைய முயற்சிகள் வெறும் சடங்குகளாகி விட வேண்டும் என்பதுதான் இந்த வளர்ந்த நாடுகளின் எண்ணமாக இருந்து வருகிறது.