திங்கள், 21 பிப்ரவரி, 2011

அன்பழகனின் கேள்விகளுக்கு அண்ணாவின் பதில்கள்









அது என்னமோ தெரியவில்லை. சட்டமன்ற கூட்டத்தொடர்கள் நடக்கும் காலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் விலைவாசி உயர்வைப் பற்றி பேசினாலே நிதியமைச்சர் அன்பழகன் மிகவும் பதட்டமடைந்து விடுகிறார். இது அவரது சுபாவத்திற்கு மாறுபட்ட ஒன்று.

எந்தச் சூழ்நிலையிலும் ஆழ்ந்த சிந்தனையோடு அமைதியாக உட் கார்ந்திருப்பதே அவருடைய வாடிக்கை.

கடந்த 3, 4 கூட்டத் தொடர்களில் அவருடைய இந்த சுபாவத்திற்கு மாறு பட்ட பேச்சுக்களை பத்திரிகை படிப்ப வர்கள் அறிய முடியும்.

தமிழகத்தில் விலைவாசி மிக உயர்ந்திருக்கிறதே என்றால், அதற்கு என்ன காரணம் என்று நீங்களே கண்டு பிடித்துச் சொல்லுங்கள் என்கிறார். அப்புறம் அதற்கும் ஒருபடி மேலே போய் கேரளாவிலும், மேற்குவங்கத்தி லும் விலைவாசி ஏறவில்லையா என் கிறார். அதற்கப்புறம், உச்சிக்கே போய், சம்பளம் கூடினால் விலைவாசி கூடும் என்கிறார். பொருளாதார சூத் திரத்தில் இது தவிர்க்க முடியாத தென்று ஒரே போடாகப்போடுகிறார்.

தமிழகத்தில் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். சட்டமன்ற, நாடாளுமன்ற அனுபவமிக்கவர். இப்போது தமிழகத்தின் நிதியமைச்சராக இருப்ப வரும்கூட.

நீக்கமற நிறைந்திருக்கிற விலை வாசி உயர்வைப் பற்றி எதிர்க்கட்சியினர் பேசினால், அவர்களுடைய கருத்தை உள்வாங்கி, உணர்ந்து பேச வேண்டும். ஆனால், ஒரு அடிமையிடம் ஆண்டான் பேசுவது போன்ற தொனியிலேயே நிதியமைச்சர் அன்ப ழகனின் பேச்சுக்கள் உள்ளன.

இப்படி ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் பேசுவது தொன்றுதொட்டு வரும் பழக்கம் போலும்.

திமுக எதிர்க்கட்சியாக இருக்கக் கூடிய காலத்தில் விலைவாசி உயர்வை பற்றி பேசுகின்ற போது, அன்றைய காங்கிரஸ் சட்டமன்றத்தின் நிதியமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் பேசிவரும் பேச்சுக்களையே உதாரண மாக்கி அறிஞர் அண்ணா அவர்கள் தனக்கே உரிய பாணியில் பதில் கூறி யிருக்கிறார்.

அண்ணாவின் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர் அன்பழகன் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது. அவர் பேசுகின்ற எந்தவொரு தலைப்பிலான பேச்சானாலும் அதில் அண்ணாவின் பெயரை குறிப்பிட ஒருபோதும் மறந்தாரில்லை. எனவே, அன்பழகன் விருப்பப்படியே அவருடைய கேள்விகளுக்கு அண்ணா அவர்கள் 6.8.1961ல் எழுதிய 156ம் எண்ணிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சில விபரங்களை அன்பழகன் பார்வைக்கு சமர்ப்பிக் கிறோம்.

“மந்திரி கனம் சுப்பிரமணியம் அவர்கள் இந்தாண்டு வரவு - செலவு திட்டத்தை பிரரேபித்து பேசுகையில் குறிப்பிட்டார். இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவு சென்னை மாநிலத்தில்தான் 2500 கிராமங்களுக்கு மின்சார வசதி தரப்பட்டிருக்கிறது என்று.

உண்மைதான். கிராமங்களுக்கு மின்சார ஒளி தரப்பட்டிருப்பதினா லேயே நாட்டு மக்களின் பொது வருவாய் அதிகரித்து, கஷ்டங்கள் நீங்கி, வாழ்வு கிடைத்துவிட்டதா என்றால் இல்லையே. மின்சார ஒளி கிராமங்களுக்கு மிக அவசியமாக தேவை யான வசதிகளில் ஒன்று. ஆனால், அது மட்டுமா மக்களின் தேவை?

ஒரு ரூபாய் வைத்திருக்கிறான் ஒருவன். அவனுக்கு பசி கடுமையாக இருக்கிறது. அவன் தனது பசியை நீக்க அந்த ரூபாயைக் கொண்டு உண வுப் பண்டம் வாங்குவானா அல்லது வீட்டிலே கொளுத்தி வைத்தால் கம் மென்று மணக்கும் என்று கருதி ஊது பத்தி வாங்குவானா? ஊதுபத்தி வாங் குவேன் என்கிறார் சுப்பிரமணியம். மனிதனே சோறின்றி சாகும்போது அந்த மனிதனுக்கு மருந்தும், கல்வியும் தருகிறேன் என்று கூறிக்கொண்டிருக்கிறார் சுப்பிரமணியம்.

கூலி உயர்வும், ஊதிய உயர்வும் ஏற்பட்டுள்ளன. ஆனால், அதைவிட அதிகளவில் விலைகள் ஏறிவிட்டிருக் கின்றன.

உலகெங்குமே விலைவாசி ஏற்றம் இருக்கிறது. இங்கு மட்டுமல்ல என்று வாதாடி பொறுப்பை தட்டிக்கழித்து விட முனைகின்றனர்.....................

இப்படி போகிறது பெருந்தகை அண்ணாவின் நீண்ட கடிதம்.

அண்ணா அவர்கள் 1961ல் சொன்னதைத்தான் இந்த 2011ல் தமிழக இடதுசாரிகள் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

விலைவாசி உயர்ந்திருக்கிறதென்றால் பாண்டி பஜாரைப் போய் பார் என்றார் முதலமைச்சர். வெங்காய விலை யைப் பற்றி கேள்வி எழுப்பினால் பெரியாரிடம் போய் கேள் என்றார் அதே முதலமைச்சர். அதே முதலமைச்சரிட மும், நிதியமைச்சரிடமும் இடதுசாரி கள் மட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவரும் கேட்பது விலைகள் விஷம் போல் ஏறியிருக்கிறது; அதற்கு ஏற்றாற்போல் உழைத்துப் பிழைக்க அடிப்படை மூலமான மின்சாரமோ தமிழகம் முழுவதும் கடந்த 4 ஆண்டு காலமாக தடைபட்டுக் கிடக்கிறது.

அண்ணாவினுடைய அற்புதமான இன்னொரு உவமானம் உண்டு. அதா வது, வேகாத சோற்றை வெள்ளித் தட்டில் வைத்தென்ன பயன்? என்பது. அதுபோல, நீங்கள் கொடுக்கக்கூடிய இலவசங்கள் இன்றைக்கு இருக்கின் றன. ஆகவேதான், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரிக்க அடிப்படையான திட்டங்களை தீட்டுங்கள் என்று நாங்கள் சொல்கிறோம்.

அதாவது, வேருக்கு நீர் பாய்ச்சுங்கள் என்கிறோம் நாங்கள். நீங்களோ இலைக்கு பன்னீர் தெளித்துக் கொண் டிருக்கிறீர்கள். - இதுவும் அண்ணா வின் உவமானம் தான்.

அன்பழகனார் புரிந்துகொள் வாரா?


-இரா.ஜோதிராம்

கருத்துகள் இல்லை: