சனி, 15 அக்டோபர், 2011

‘ஊழல் செய்ய மாட்டோம் என திமுக, அதிமுக பிரச்சாரம் செய்ய முடியுமா?’

நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம் என திமுகவோ, அதிமுகவோ பிரச்சாரம் செய்ய முடியுமா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னரும், சட்டமன்றக்குழுத் தலைவருமான அ.சவுந்தரராசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த உள்ளாட்சித் தேர்தல் சட்டமன்றத்தில் இருந்து திமுகவை அகற்றியதைப் போல உள்ளாட்சி மன்றங்களில் இருந்து அகற்ற உள்ள தேர்தலாகும். இதே போன்று, உள்ளாட்சியில் ஏக போகம் செய்ய நினைக்கும் அதிமுக, அதற்குரிய பலனை தேர்தலுக்குப் பின் புரிந்து கொள்ளும். அறிந்து கொள்ளும். தமிழ்நாட்டில் உள்ளாட்சிகளுக்கு உரிய நிதி, உரிய அதிகாரம் இல்லாமல் உள்ளது. மேற்குவங்கம், கேரளா மட்டு மல்லாது பல மாநிலங்களில் உள்ளாட்சிகளுக்கு 30 சதவீத நிதி ஒதுக் கப்படுகிறது.உள்ளாட்சிகளிடமிருந்து அடிப்படைத் தேவைகளை எதிர் பார்க்கும் உரிமை மக்களுக்கு உள் ளது. அது தான் உள்ளாட்சியின் முக்கிய நோக்கமுமாகும். குப்பை களை அகற்றுவது, கொசுக்களை ஒழிப்பது, நோய்வராமல் தடுப்பது, அப்படி நோய் வந்தால் அவற்றை சரிசெய்ய மண்டல வாரியாக ஆரம்ப சுகாதார நிலையங்களை உருவாக்குவது தான் உள்ளாட் சியின் கடமையாகும். ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக இந்த வச திகள் செய்து தரப்படவில்லை. இருக்கும் நிதியை திருடும் நிலை தான் உள்ளது. இதன் காரணமாக உள்ளாட்சிகளின் கீழ் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைச் சீர்த்திருத்தம் செய்ய வேண் டியதுள்ளது.

உள்ளாட்சிகளை நடத்துபவர் கள் நேர்மையானவர்களாக, தூய் மையானவர்களாக, வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுபவர்க ளாக இருக்க வேண்டும். ஆனால், குடியரசுத் தலைவர் உரை உள் ளிட்டவற்றில் குறிப்பிட்டது போல ஊழல் மிகுந்ததாக உள்ளாட்சி அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளன. திமுக முன்னாள் மத்திய அமைச் சர் தயாநிதிமாறன் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. அலைக் கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் 9 மாதங்கள் கழித்து சிபிஐ இந்த சோதனையை நடத்தியுள்ளது பார்க்கும் போது குதிரையை வெளியே விட்டப்பின் லாயத்தை மூடுவது போல உள்ளது.


ஊழல் என்பது லட்சம், கோடி என்பதிலிருந்து 1 லட்சம் கோடி, 2 லட்சம் கோடி என ஊழலின் அளவு உயர்ந்துள்ளது. இப்படிப் பட்ட ஊழல்வாதிகளிடம் தான் மதுரை மாநகராட்சி சிக்கிக் கிடக் கிறது. திமுகவுக்கு இளைத்ததாக அதிமுக இல்லை. ஆசிரியர் இட மாறுதல், மின்வாரியத்தில் இட மாறுதல் என ஒவ்வொரு மாறு தலுக்கும் நான்கரை, ஐந்தரை லட் சம் என கேட்க ஆரம்பித்துள் ளனர். சறுக்குப்பாதையில் சறுக்கி ஊழல் சகதியில் அதிமுக விழுந் துள்ளது. உள்ளாட்சி அமைப்பு கள் முழுவதும் தங்களிடமே இருக்க வேண்டும் என்ற ஏக போகத்தின் காரணமாக சட்ட மன்றத் தேர்தலில் கூட்டணியில் இருந்த தேமுதிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளை வேண்டாம் என்றுள்ளது.அவர்களின் அடக்கு முறையை உணர்த்த ஒரு வெளிச்சக் கீற்றை இந்த தேர்தலில் நாம் பதிவு செய்ய வேண்டும். மக்களின் அடிப் படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அணி உருவாக்கப் பட்டுள்ளது.


எங்கள் தலைவர்கள் ஊழலற்ற நேர்மையான ஆட்சி அமைய எங் களுக்கு வாக்களியுங்கள் என பிரச் சாரம் செய்கிறார்கள். நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம் என திமுகவோ, அதிமுகவோ பிரச் சாரம் செய்ய முடியுமா? என அ. சவுந்தரராசன் கேள்வி எழுப்பினார். (ந.நி.)

கருத்துகள் இல்லை: