ஞாயிறு, 3 ஜூலை, 2011

2001க்கு பிறகு அமெரிக்கா கொன்றுபோட்ட 2.25 லட்சம் பேர் வீடியோ


2001ம் ஆண்டு செப்டம் பர் 11ம் தேதி நியூயார்க் நக ரில் நடந்த தீவிரவாத தாக் குதலுக்குப் பின்னர் உலக அளவில் பல்வேறு நாடு களில் அமெரிக்கப் படை யினர் நடத்திய தாக்குதல் களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ள னர். அமெரிக்கப் படைகள் இந்த வேட்டைக்காக செய்த செலவுத் தொகை மட்டும் 4.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம் நடத்திய புள்ளிவிவர சேகரிப்பில் இது தெரிய வந்துள்ளது.

2001ம் ஆண்டு செப்டம் பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் தீவிரவாதிகள் தாக்கு தல் நடத்தினர். இரட்டை கோபுரம் விமானம் மூலம் தகர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, உலகளாவிய தீவிரவாத வேட்டையைத் தொடங் கியது. ஆப்கானிஸ்தான், இராக், பாகிஸ்தான், ஏமன் என பல நாடுகளிலும் அமெ ரிக்கப் படைகள் வேட் டை யில் இறங்கின.

இதில் இராக், ஆப்கா னிஸ்தானில்தான் பெருமள வில் உயிர்ச்சேதத்தை ஏற் படுத்தின அமெரிக்கப் படைகள். அமெரிக்கப் படைகள் இதுவரை நடத் திய தாக்குதல்களில் 2 லட் சத்து 25 ஆயிரம் பேர் உயி ரிழந்துள்ளதாக இந்தத் தக வல் தெரிவிக்கிறது.

அமெரிக்கப் படைக ளின் தாக்குதலில் சிக்கி 3 லட்சத்து 65 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் பல் கலைக்கழக தகவல் தெரி விக்கிறது.

இதில் அமெரிக்க கூட்டுப் படைகளின் தரப்பில் மட்டும் 31 ஆயிரத்து 741 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவருமே ராணுவத்தினர் ஆவர். இவர் களில் 6000 பேர் அமெரிக்கர்கள், 1200 பேர் கூட்டுப் படையினர், 9900 பேர் இராக்கியர்கள், 8800 பேர் ஆப்கானிஸ்தானியர்கள், 3500 பேர் பாகிஸ்தானியர் கள். இவர்கள் தவிர அமெ ரிக்காவுக்காக பாதுகாப்பு குறித்த தகவல்களைத் திரட் டித் தந்தவர்கள் 2300 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அப்பாவி மக்கள்தான் பெருமளவில் உயிரிழந்துள் ளனர். இவர்களின் எண் ணிக்கை மட்டும் 1 லட்சத்து 72 ஆயிரம் பேர் ஆவர். இவர்களில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் இராக்கியர்கள், 35,000 பேர் பாகிஸ்தானியர் கள், 12,000 பேர் ஆப்கா னிஸ்தானியர்கள் ஆவர்.

அமெரிக்க மற்றும் கூட் டுப் படையினரிடம் சிக்கி உயிரிழந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. இருப்பி னும் இது 20,000 முதல் 51,000 ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது.

தாக்குதலில் உயிரிழந்த வர்களில் 168 பேர் செய்தியாளர்கள், 266 பேர் மனிதா பிமான பணியாளர்கள் ஆவர்.

அமெரிக்காவின் தீவிர வாதத்திற்கு எதிரான போரில் சிக்கி இடம் பெயர்ந்து அக திகளாக உள்ளோரின் எண் ணிக்கை மட்டும் 70.8 லட் சம் பேர் ஆவர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இராக் மற்றும் ஆப்கானிஸ்தா னைச் சேர்ந்தவர்கள்.

கருத்துகள் இல்லை: