புதன், 19 ஜனவரி, 2011

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்தால் கொடுர தாக்குதல் திமுக அரசின் பொங்கல் பரிசு

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருனாநிதியின் ஆட்சியில் போராட்டங்களாக ஒருபோதும் கூடாது

இளைஞன் என்ற திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதுவோம் இளைஞர்களை தன்மானமும் போராட்ட குணமும் கொண்டவர்களாக மாற்றுதற்காக அல்ல அவர்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு டாஸ்மார்க்கடையில் குடித்துவிட்டு மானம் இழந்து அறிவு இழந்து கிடக்கவேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட எனது ஆட்சியல் இளைஞர்கள் போராட வருவதும் அவர்கள் மறியல் ஆர்ப்பாட்டம் செய்வதும் தேசவீரோத செயல் .

பெட்ரோல் விலைகளை பெட்ரோலிய நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதி வழங்கப்பட்ட கடந்த ஆறு மாதங்களில் ஏழு முறை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. கடந்த 30 நாட்களில் இரண்டாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த் தப்பட்டுள்ளது.


இந்த விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ச. லெனின், பொருளாளர் தாமு, வடசென்னை மாவட்டத் தலைவர் இல. சண்முகசுந்தரம், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் முருகன் ஆகியோர் தலைமையில் செவ்வாயன்று (ஜன.18) நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பவனை முற்றுகையிட ஊர் வலமாக வந்தனர்.

இந்தியன் ஆயில் பவன் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல் துறையினர் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர்.

தடியடி

இதனையடுத்து போலீசார் காட்டு மிராண்டித்தனமாக தடியடி நடத்தினர். கீழே விழுந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்துக் கொண்டு தாக்கிய தோடு, பூட்ஸ் கால்களால் மிதித்தனர். லத்தியை கொண்டு வயிற்றில் குத்தினர். இந்த தாக்குதல்களில் 8 பேர் காயம டைந்தனர்.

இதனிடையே, ஒரு பகுதியினர் இந்தியன் ஆயில் பவனுக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை போலீசாரும், அடையா ளம் தெரியாத நபர்களும், ஆயில் பவன் ஊழியர்களும் சுற்றி வளைத்து தாக்கினர். இத் தாக்குதலில் முரளி (மயிலை), சுரேஷ் (சோழிங் கநல்லூர்), குமரன் (சைதை), மணி (ஆயிரம் விளக்கு), ரமேஷ் (எழும்பூர்), உதயா (அண்ணாநகர்), சுரேஷ் (வேளச்சேரி), ஜெயந்த் (தாம்பரம்) ஆகிய 8 பேரும் பலத்த காயமடைந்தனர்.

ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தவர்களை போலீசார் கீழே தள்ளி தரதரவென்று இழுத்து வேனில் தூக்கி எறிந்தனர். பின்னர் வேனுக்குள் ஏறி லத்தியால் தாக்கி பூட்ஸ் காலால் உதைத்தனர். இதனால் அந்த இடம் போர்க் கோலமாக காட்சி அளித் தது.


கருத்துகள் இல்லை: