புதன், 28 டிசம்பர், 2011

லோக்பால் மசோதா 1968 முதல் 2011 வரை

லோக்பால் மசோதா, உணவுப்பாதுகாப்பு மசோதா ஆகிய இரண்டு மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. டிசம்பர் 27ம் தேதி துவங்கி மூன்று நாட்களும் விவாதம் நடைபெற உள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இம் மசோதாக்கள் குறித்து பரபரப்பும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது இயல்பான தொன்றே. பிறப்பிலிருந்து இறப்பு வரை இந்தியாவில் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பது ஊழல். இந்திய மக்கள் தங்கள் வாழ்க்கையின் அனைத்து நிலை களிலும் ஊழலைச் சந்தித்து வருகிறார்கள்.

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தான் முன்வைத்துள்ளபடி இம்மசோதா அமைய வேண்டுமென வலியுறுத்தி மும்பையில் மூன்று நாட்கள் உண்ணாவிரதப்போராட்டத்தை துவக்கியுள்ளார். தில்லி ராம்லீலா மைதானத்தில் ஹசாரே குழுவினர் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்து கின்றனர்.

லோக்பால் மசோதாவை பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் சட்டம், நீதித்துறை தொடர்பான நிலைக்குழு செப்டம்பர் 23 முதல் டிசம்பர் 2வதுவாரம் வரை சுமார் இரண்டரை மாதங்கள் செலவிட்டு உருவாக்கியுள்ளது. நிலைக் குழுவின் முன்பு 140 பேர் ஆஜராகி இம் மசோதா குறித்து சுமார் 40 மணி நேரம் தங்களது பரிந்துரைகள், ஆலோ சனைகளை முன்வைத்துள்ளனர்.

லோக்பால் மசோதாவின் பூர்வீகம் நீண்ட நெடிய ஒன்றாகும். 1966 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நிர்வாகச் சீர் திருத்த ஆணையம், லோக்பால் அமைப்பு உருவாக்கவேண்டியதன் அவசியத்தை வலி யுறுத்தியது. அதன் பின்னர் மத்திய அரசு மாநிலங்களவையிலும் மக்களவையிலும் 1968, 1971,1977,1985,1989,1996,1998 மற்றும் 2001ஆம் ஆண்டுகளில் லோக்பால் அமைப்பிற் கான மசோதாக்களை அறிமுகப்படுத்தியது. ஆனால் மசோதா நிறைவேற்றப்படவில்லை.

இந்தப் பின்னணியில்தான் 2011ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி அமைச்சரவை இம் மசோதாவை உருவாக்க ஒப்புதல் அளித்தது. லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்று இடதுசாரிக்கட்சிகள் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்துள்ளன. அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்களும் இந்தப் பிரச்சனையை சமீபத்தில் கையிலெடுத்தனர். இவர்களது பின்னணி என்ன வென்று அறியாவிட்டாலும் கூட மக்கள் இவர்களது கோரிக்கைக்கு ஆதரவளித்தனர். ஊழலுக்கு எதிராக மக்களிடம் எழுந்துள்ள விழிப்புணர்வு மற்றும் எதிர்ப்புணர் வின் வெளிப்பாடே ஆகும் இது.

லோக்பால் மசோதாவின் நகல் டிசம்பர் 22அன்று நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு வழங்கப்பட்டது. 62 பக்கங்களைக் கொண்ட இந்த மசோதாவில் 15 பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. மத்திய அளவில் லோக் பால் அமைப்பையும், மாநிலங்களில் லோக் அயுக்தா அமைப்பையும் உருவாக்குவதற் கான பரிந்துரைகள் இம் மசோதாவில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த மசோதா நிறைவேறுமா? என்ற ஐயப்பாட்டை ஊடகங்கள் எழுப்பிக்கொண்டுயிருந்தன.  மக்களவையில் இந்த மசோதா  ஒருவழியாக நிறைவேற்பட்டுள்ளது . மசோதா எந்த வடிவில் வந்தாலும் அதை ஆதரிக்க திமுகஇ திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட் சிகள் தயாராக உள்ளன. அரசுக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் கை கொடுக்கும் ஆர்ஜேடிஇ சமாஜ்வாதிஇ பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் மசோதாவை ஆதரிக்க வில்லை என்றபோதிலும்  மசோதா நிறைவேற்பட்டுள்ளது குறிபிடதக்கது .

ஆனால் மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்றுவதற்கான பலம் ஐ.மு. கூட்டணிக்கு இல்லை. எதிர்க்கட்சியான பாஜக ஆதரித்தால்தான் மசோதாவை நிறை வேற்ற முடியும். சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதால் மசோதாவை எதிர்ப் பதாக பாஜக கூறியுள்ளது. ஆர்ஜேடி போன்ற கட்சிகளும் வேறு சில காரணங் களைக் கூறி மசோதாவை எதிர்ப்பதாகக் கூறுகின்றன.

மகளிர் இடஒதுக்கீடு மசேதா மாநிலங் களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் இம் மசோதாவை நிறைவேற்ற விடாமல் ஆர்ஜேடி, சமாஜ்வாதி போன்ற கட் சிகள் தடுத்துவிட்டன என்பது முந்தைய அனுபவம். இதைச் சாக்காக வைத்து, கருத் தொற்றுமை ஏற்படுத்தப்போவதாககக் கூறி மசோதாவை கிடப்பில் போட்டுவிட்டது மன் மோகன்சிங் அரசு.

 மசோதாவை தயாரிப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடத்தக்க பங்காற் றியுள்ளது. நிலையாணைக்குழுவில் இடம் பெற்றிருந்ததின் மூலம் பல்வேறு ஆலோ சனைகளை கட்சி முன்வைத்துள்ளது. எனி னும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து நடைபெற்ற அனைத் துக்கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முன்மொழிந்த சில தீர்மானங் கள் ஏற்கப்பட்டன. அது எந்த வடிவில் உள் ளது என்பது விவாதத்தின்போதே வெளிச் சத்திற்கு வரும். மார்க்சிஸ்ட் கட்சி தமது ஆலோசனைகள், திருத்தங்களை எழுத்துப் பூர்வமாக அளித்துள்ளது.

இதே போன்று பல்வேறு கட்சிகள் தங் களது திருத்தங்கள், கருத்துக்களை முன் வைத்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியை பொறுத்தவரை சில முக்கியமான ஆலோசனைகளை முன்வைத்தது.

1. பிரதமர் பதவியையும் லோக்பால் விசா ரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும்.

2. நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். அதற்கு தடையாக உள்ள அரசியல் சாசனத்தின் 105வது பிரிவில் உரிய மாற்றம் செய்ய வேண்டும்.

3. மத்திய மற்றும் மாநில அரசு நிலை யில் குரூப்-ஏ, குரூப்-பி, குரூப்-சி, குரூப்-டி அதிகாரிகளை விசாரணை வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். மத்திய அரசு அதிகாரிகளை லோக்பால் வரம்பிற்குள்ளும், மாநில அரசு அதிகாரிகளை லோக் அயுக்தா விசாரணை வரம்பிற்குள்ளும் கொண்டுவர வேண்டும்.

4. லோக்பால் அமைப்பின் தலைவர் உட்பட, சுதந்திரமான தேர்வுக்குழுவின் தேர்வு அடிப்படையிலேயே நியமிக்கப்பட வேண்டும்.

5. மாநிலங்களில் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்க தனி மசோதா தாக்கல் செய் யப்பட வேண்டும்.

மத்திய புலனாய்வுத்துறை இயக்குநர் நியமனம், லோக்பால் தேர்வுக்குழு பரிந்துரை அடிப்படையிலேயே நடைபெற வேண்டும்.

6.ஊழல் குறித்த வரையறையில் தெளி வில்லை. 1988ஆம் ஆண்டு உருவாக்கப் பட்ட ஊழல் தடுப்புச்சட்டத்தின் அடிப்படை யிலேயே வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே உரிய வகையில் ஊழல் குறித்த வரையறை செய்யப்பட வேண்டும்.

7. மிக முக்கியமாக பெரும் முதலாளி களையும், அவர்களது நிறுவனங்களையும் லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். தவறிழைக்கும் நிறுவனங்களின் உரிமம் மற்றும் குத்தகையை ரத்து செய்யவேண்டும். இழப்பீட்டுத் தொகையை அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். ஊழலில் ஈடுபடும் நிறுவனங் களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அரசு கஜானாவில் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கியத் திருத்தங்களை மார்க்சிஸ்ட் கட்சி முன்மொழிந்துள்ளது. விவாதத்தின்போதும் முன்வைக்கும்.

இம்மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பு அரசியல் சாசன திருத்தத்தை அரசு முன்மொழிந்திருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. பலவீனமான லோக்பால் அமைப்பையே அரசு விரும்பு கிறதோ என்ற ஐயப்பாடு எழும்புகிறது.

எதிர்க்கட்சியான பாஜக மற்றும் சில கட்சிகள் எதிர்க்கும் வேகத்தைப் பார்க்கும் போது மசோதா நிறைவேறுமா? என்ற கேள்வி வலுவாகவே எழுகிறது.

லோக்பால் அமைப்பை உருவாக்கு வதற்கான போராட்டம் 1968ல் அதாவது 20ம் நூற்றாண்டில் துவங்கி இந்த நூற்றாண்டு வரை நடைபெற்று வருகிறது. இம் மசோதா வலுவான லோக்பால் அமைப்பை உரு வாக்கும் வகையில் நிறைவேற்றப்பட வேண்டு மென்று இந்திய மக்கள் எதிர்பார்க்கி றார்கள். அவர்களது விருப்பம் நிறை வேறுமா? என்பது இரண்டொரு நாளில் தெரிந்துவிடும்.

- டி.கே.ரங்கராஜன் எம்.பி.,

 மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 

கருத்துகள் இல்லை: