வெள்ளி, 24 செப்டம்பர், 2010

பாபர் மசூதி - வரலாற்றுச் சான்றுகள்

வால்மீகி இராமாயணத்தின்படி இராமபிரான் திரேத்தாயுகத்தில் பிறந்தவர். அவரு டைய ஆட்சியான இராமராஜ்யம் பாரதத்தின் பொற்காலம் எனப்படுகின்றது. (அன்று தென் னகம் பாரதத்தின் ஒரு பகுதியாக இருக்க வில்லை!) திரேத்தாயுகம் மட்டும் பன்னிரண்டு லட்சத்து தொண்ணூற்று எட்டாயிரம் ஆண்டுகளாகும் (12,98,000), இதற்குப்பின் துவாபராயுகம், எட்டுலட்சத்து அறுபத்தி நான்காயிரம் (8,64,000), இப்பொழுது நடப்பது கலியுகம், நான்கு லட்சத்து முப்பத்து இரண்டா யிரம் (4,32,000); அடுத்து வரப்போவது கிருத கயுகம். திரேத்தாயுகத்தில் பிறந்த காரணத்தினால் தான் பாஜக ஆட்சிபுரியும் மாநிலங்களில் பள்ளிப் பாடநூல்களில் “ஒன்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இராம பிரான் ராமராஜ்யத்தின் பொற்காலம் இன்றும் இந்திய மக்களின் உள்ளங்களில் பசுமையாகத் தைத்து நிற்கின்றது” என்று எழுதப் பட்டுள்ளதைக் காணலாம்.

லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இராமபிரானின் பிறந்த இடத்தை அயோத்தியில் கறாராக அடையாளம் “கண்டுபிடித்துள்ளது” பாஜக - ஆர்எஸ்எஸ்!

அயோத்தியில் பாப்ரி மசூதி 1528ம் ஆண்டு பாபரின் ஆளுனர் மீர்பாக்கியால் கட்டப்பட்டது (பதிவு செய்யப்பட்ட வரலாறு). பாபர்தான் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவி னார் (1526-1855). இவருடைய மகன் ஹூமா யுன் (1530-1556), 26 ஆண்டுகளும், இவரு டைய மகன் மாபெரும் அக்பர் (1556 - 1605), 49 ஆண்டுகளும் ஆண்டனர். இந்த அக்பர் மாமன்னனைத்தான் இந்திய தேசியத்தை உருவாக்கிய தந்தை என்று ஜவஹர்லால் நேரு தனது வரலாற்றின் காட்சிகள் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.பாபர் ஒரு இலக்கிய வாதி. இவருடைய இந்திய குறிப்புகள் பாபர் நாமா எனப்படுகின்றன.

இவர் தனது மகன் ஹூமாயினுக்கு எழுதி வைத்துச் சென்ற உயிலில் (மரண சாசனம்) : “எனது மகனே! இந்தியாவில் பல மதப்பிரிவுகளைச் சார்ந்த மக்கள் வாழ்கின்ற னர். இப்படிப்பட்ட ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை மன்னாதி மன்னரான அல்லா உனது கரங்களில் ஒப்படைத்திருப்பதற்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும். ஆதலால் உனது கடமைகளாவன.

உன்னைப் போன்றோரை மததுவேஷம் பாதித்துவிட அனுமதிக்கக்கூடாது. மக்களின் எல்லாப்பிரிவினரின் மத ஆசாரங்கள் மற்றும் உணர்வுகளை கணக்கிலெடுத்துக் கொள்வது அவசியம்.

குறிப்பாக பசுவதை செய்வதை தவிர்த்து விடு, எந்த மக்கள் பிரிவினரின் வழிபாட்டுத் தலங்களையும் அழிக்காதே, அடக்குமுறை வாளால் அல்லாமல் அன்பெனும் வாளாலும், கடமை உணர்வாலும்தான் இஸ்லாமை சிறப்பான முறையில் பரவச் செய்யலாம்.

இப்படி உயில் எழுதி வைத்துச் சென்ற மாமன்னன் பாபர்தான் அயோத்தியில் இராமர் பிறந்த இடத்திலிருந்த (ராமர் ஜென்மபூமி) இராமர் கோவிலை இடித்துவிட்டு மசூதியைக் கட்டினார் என்று இந்துத்துவாவாதிகள் வாய்க் கூசாமல் அபாண்ட பழி சுமத்துகின்றனர்.

இம்மசூதி கட்டப்பட்ட காலத்தில் (16ம் நூற்றாண்டில்) வாழ்ந்தவர் துளசிதாசர். இவர்தான் 1575ம் ஆண்டு பேச்சுமொழியில் (அவதி - இந்தி) இராமசரித்திரமனாஸ் என்ற ராமாயணம் எழுதிய இராமபக்தர். புரியாத பழமை சமஸ்கிருதத்திலுள்ள வால்மீகி இரா மாயணம் மக்கள் படித்ததில்லை. படிக்கவும் இயலாது. இது “தெய்வமொழி!” சாதாரண இந்துமக்கள் வடநாட்டில் துளசிதாஸ் ராமா யணத்தைப் படித்துதான் பக்தி பரவசமடைந்து இல்லங்களில் ராமசரித்திரமனாஸ் வைத்துக் கொள்கிறார்கள். துளசிதாசர் வேறுபல பக்தி இலக்கிய நூல்கள் எழுதியுள்ளார். இவர் ஒரு துறவி, மதப்போதகர், மதக்கவிஞர். இவருக்குப் பிறகுதான் ராமாயணம் பிரபல்யமானது. பாப்ரி மசூதி கட்டப்பட்ட 30, 40 ஆண்டுகளுக்குள் இவை எல்லாம் எழுதப்பட்டன.

அக்பரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். துளசிதாசருக்கு நெருங்கிய முஸ்லீம் நண்பர் ரஹீம்கான் கானா என்பவர். இவர் சமஸ்கிரு தத்திலும், இந்தியிலும் (அவதி) பிரசித்திபெற்ற கவிஞர், இவர்கள் இருவரின் விருப்பப்படி அக்பர் ஆட்சியின் நிதி அமைச்சர் தோடர் மால் (இந்து) வாரணாசியில் அனுமார் கோவில் கட்டிக்கொள்ள அக்பரின் வாழ்த்துக்களுடன் நிலம் தானமாகக் கொடுத்து இன்றும் துளசி அனுமார் மந்திர் அங்கு நிமிர்ந்து நிற்கின்றது. இராமர்கோவில் இடிக்கப்பட்டிருந்தால் தனது எதிர்ப்பை, வேதனையை வெளியிட்டிருப்பார். இராமர்கோவில் அயோத்தியிலும், வாரணாசி யிலும் கட்ட அக்பரிடம் இடம் கேட்டிருந்தால் அல்லது பாபரால் இடிக்கப்பட்டிருந்தால் அக் பர் நிச்சயமாக இராமர்கோவில் கட்டிக் கொடுத்திருப்பார். அயோத்தியில் இன்றும் எழில்மிகு காட்சியளிக்கும் பிரம்மாண்டமான அனுமார் மாளிகை கூட 1754ல் நவாப் மன்சூர் அலியால் கட்டப்பட்டது. இவையாவும் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள். வரலாற்றுப் புரட்டர் கள் இவைகளையெல்லாம் இருட்டடிப்பு செய்து வருகின்றனர். பாடநூல்களில் “செக் யூலர்” கல்வியில் இடம்பெறுவதில்லையே!

சீக்கிய மதப்பிரிவு நிறுவனர் குருநானக் (1469-1538), பாப்ரி மசூதி கட்டப்பட்ட காலத் தில் வாழ்ந்த பெருமகனார். காஷ்மீர் முதல் இலங்கை வரை, சோமநாத், வாரணாசி, மதுரா, பிருந்தாவன் என விரிவான சுற்றுப்பயணம் செய்தவர். மெக்கா, மெதினாவிற்குக் கூட சென்று வந்துள்ளவர். பாப்ரி மசூதி கட்டப்பட்ட பிறகு பத்து ஆண்டுகள் வாழ்ந்த பேரறிஞர், இராமர் கோவில் இடிக்கப்பட்டிருந்தால் அமைதி காத்திருக்கமாட்டார். பிரபல வங்காள சனாதன பிராமண முனிவர் சைத்தன்யா, 1486ல் பிறந்து பாப்ரி மசூதி கட்டப்பட்ட பிறகு 35 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர். இராமர் கோவில் இடிக்கப்பட்டிருந்தால் இவர் வாய் மூடி மவுனியாக இருந்து இருக்கமாட்டார்.

இக்கட்டத்திற்குபின் தோன்றிய முனி வர்களோ, 19ஆம் நூற்றாண்டின் பிரபலமான இந்து முன்னோடிகள் ராஜாராம் மோகன்ராய் (பிரம்மசமாஜம்), தயானந்த சரஸ்வதி (ஆரிய சமாஜம்), தேவேந்திரநாத் தாகூர் போன்றவர் களோ காங்கிரசின் பிரபல இந்து தலைவர் களான மதன்மோகன் மாளவியா, லாலா லஜ பதிராய், சுவாமி ஷ்ரதானந்தா, பால கங்காதர் திலகர், காந்தி, மோதிலால் நேரு போன்றவர் கள் எவருமே இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாக ஏன் அறிந்திருக்கவில்லை? பாஜகவின் பதில் என்ன?

முதல் சர்ச்சை - பிரிட்டிஷ் விஷமம்!

அலகாபாத் பல்கலைக் கழகத்தின் “மத்திய நவீனகால வரலாற்றுத்துறை முதல் வர் (ழநயன டிக வாந னநயீயசவஅநவே டிக அநனநைஎயட யனே அடினநசn ாளைவடிசல) பேராசிரியர் டாக்டர் சுஷில் மஹிவத்சவா 1985ஜனவரி ப்ரோப் (யீசடிநெ) என்ற மாத இதழில் பாப்ரி மசூதி சர்ச்சை பற்றி கூறுவதாவது;-

ஃபைசாபாத்தில் (கயணையயென)சிப்பாய் கலகம் வெடித்தபொழுது அயோத்தி மகந்த்கள் (மடா திபதிகள்) பிரிட்டிஷாரை பகிரங்கமாக ஆத ரித்தனர். பிரிட்டிஷ் ராணுவத்திற்கு தங்கும் இடமும் உணவுப் பொருள்களும் கொடுத்து உதவினர்.சிப்பாய் கலகம் அடக்கப்பட்டபின் மகந்த்களுக்கு சன்மானமாக பாப்ரி சொத்துரி மையுடன் வழங்கப்பட்டது. இராமர் பிறந்ததை குறிக்கும் வகையில் மேடை அமைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது.பாப்ரி மசூதி யையும் இந்த மேடையையும் பிரித்துக்காட் டும் வேலியும்(கநnஉந)இவைகளுக்கிடையில் அமைக்கப்பட்டது என்று ஃபைசாபாத் மாவட்ட கெஜெட்டை ஆய்வுசெய்து எழுதியுள்ளார். இராமர் பிறந்த இடம் மசூதி வளாகத்தில்தான் உள்ளது என்று உரிமை கொண்டாட இந்துக் களை பிரிட்டிஷார் ஊக்குவித்தனர் என்றும் ஸ்ரீவத்சவா எழுதுகின்றார்.

இந்தப்பிரச்சனை 1853ஆம்ஆண்டு முதல் முதலில் சிலரால் எழுப்பிவிடப்பட்ட பொழுது இந்துக்களும் முஸ்லிம்களும் ஊர் பஞ்சாயத்துப்பேசி 1855ல் ஒரு உடன்பாடு கண்டனர். பிரச்சனை தலை தூக்காமல் நான்கு ஆண்டுகள் அமைதி நிலவியது. 1859ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மாவட்ட ஆட்சியர் வடக்கு நுழைவாயிலின் மூலம் மட்டும்தான் முஸ்லிம் நுழைய வேண்டும் என உத்தரவு போட்டார். ஊர்மக்கள் ஆட்சேபம் கிளப்பி பஞ் சாயத்து முடிவை மாற்றக்கூடாது எனக்குரல் எழுப்பினர். ஆனால் பிரிட்டிஷ் மாவட்ட ஆட் சியர் உடனே தலையிட்டு பஞ்சாயத்து உடன் பாட்டில் கையொப்பமிட்ட இந்து-முஸ்லிம் பெரியவர்களை ஃபைசாபாத் சாலையோர முள்ள பெரிய ஆலமரத்தில் தூக்கிலிட்டார்.

ஆனால் இந்து முஸ்லிம் மக்கள் இந்த ஆலமரத்தை புனித வழிபாட்டு நினைவுச் சின்னமாக்கிவிட்டனர். ஆதலால் பிரிட்டிஷ் கமிஷனர் தலையிட்டு 1860ஆம் ஆண்டு அந்த மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்து புனித உடன்பாட்டுத் தடயங்களை அளித்தனர்.

இதற்குப்பின் 1949 வரை (89 ஆண்டுகள்) மக்கள் அமைதிகாத்து முஸ்லிம் மக்கள் வடக்கு வாயில் வழியாகவே சென்று தொழுகை நடத்தி வந்தனர். நாடு விடுதலைபெற்றபின் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி நள்ளிர வில் 50, 60 பேர் கொண்ட ஒரு ஆர்எஸ்எஸ் அணி மசூதி வாயிலை உடைத்து நுழைந்து அதன் மத்திய மண்டபத்தில் (னுடிஅந) குழந் தை இராமர், சீதா பிராட்டியார் ஆகியோர் சிலைகளை நட்டுவைத்து இவர்களின் திரு உருவங்களை சுவர்களில் காவி மஞ்சள் நிறத் தில் வரைந்து வைத்தார்கள். இராமர் தோன்றி விட்டதாக புரளியை மறுநாள் காலை கிளப்பி விட்டனர். காவல்துறை கான்ஸ்டபிள் ஹன்ஸ் ராஜ் இதைத் தடுக்க முயன்றும் பயனில்லை.

மறுநாள் (1949 டிசம்பர் 22) காலை காவலர் மாதாபிரசாத் இதுபற்றி புகார் செய்து முதல் தகவல் அறிக்கை எழுதினார். இவ்வறிக்கை யில் ஆர்எஸ்எஸ்காரர்களான ராம்தாஸ், ராம் சுக்லாதாஸ், சுதர்சனதாஸ் ஆகியோர் 50, 60 பேர் கும்பலாக வந்து இதைச் செய்ததாக எழுதப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டை பாப்ரிமசூதிக்குள் வைக்க திட்டமிட்டதே அன்றைய மாவட்ட ஆட்சியர் கே.கே.நய்யார்தான். இவர் ஆர்எஸ் எஸ் பிரமுகர், தனது திட்டத்தை நிறைவேற்றி பிறகு சிறிது காலத்திலேயே வேலையை ராஜினாமா செய்து ஜனசங் (முன்னாள் பாஜக) கட்சியில் பகிரங்கமாக சேர்ந்து பணியாற்றி நாடாளுமன்றத்தில் ஜனசங் எம்.பி.யாக (1967-70) உயர்த்தப்பட்டார். இறுதியில் 1992ல் மசூதியே இடிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: