வெள்ளி, 18 மார்ச், 2011

ப்ரண்ட்லைன் : கார்ப்பரேட் நிறுவனங்களின் வேட்டை காடு இந்தியா


தொடர்ந்து மெகா ஊழல்களில் சிக் கிக் கறைபடிந்துள்ளதோர் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2011-12ஆம் ஆண்டிற் கான மத்திய பட்ஜெட், நாட்டின் முன் பெரும் சவாலாக உருவாகியுள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திடுவதிலோ, பெரும்பகுதி மக்கள் வறிய நிலைக்குத் தள்ளப்படுவதைத் தடுத்து நிறுத்திடவோ முற்றிலுமாகத் தவறி விட்டது. வருவாய் தொடர்பான முன்மொழிவு களில் அரசு, வசதி படைத்தோருக்கு, குறிப் பாக கார்ப்பரேட் துறையினருக்கு, குறிப்பிடத்தக்க அளவில் வரிச் சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது. இதனால் ஏற்படும் வரு வாய் இழப்பைச் சரிசெய்வதற்காக, பணவீக் கம் என்னும் தீயை மேலும் கொழுந்துவிட்டெ ரியச் செய்திடும் வகையில், மறைமுக வரி களை அதிகரித்திருக்கிறது. நிதிப்பற்றாக் குறையைக் குறைப்பதற்காக, ஏழை மக்க ளுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு, உரங்கள் மற்றும் எரிபொருள்கள் மீது அளித்து வந்த மானியங்களை வெட்டிக் குறைத்திருக்கிறது. மேலும் அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குத் தனியாருக்குத் தாரைவார்த்திட வும் வகைசெய்துள்ளது. இத்துடன் 2009 ஏப் ரலுக்கும் 2011 மார்ச்சுக்கும் இடையே தனி யாருக்குத் தாரைவார்த்த பங்குகளையும் சேர்த்தால் சுமார் 48 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு வரும். மேலும் 2010-11 ஆம் ஆண்டுடன் 2011-12 ஆம் ஆண்டின் பட் ஜெட்டை ஒப்பிட்டுப் பார்த்தோமானால் இந் திய மக்கள் தொகையில் மூன்றில் இரு பங் காக இருக்கக்கூடிய நாட்டுப்புற ஏழை மக் களின் வளர்ச்சிக்காக விவசாயம், பாசன வசதி மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்காக ஒதுக் கீடு செய்து வந்த மத்தியத் திட்டச் செலவினங் கள் உண்மையான ரூபாயின் மதிப்பில் குறைந்திருப்பதையும் காண முடியும்.

பட்ஜெட் மதிப்பீடுகளின்படி 2011-12ஆம் ஆண்டுக்கான அரசின் மொத்த செலவினம் 12 லட்சத்து 57 ஆயிரத்து 729 கோடி ரூபாயாகும். சென்ற 2010-11ஆம் ஆண்டில் இது 12 லட்சத்து 16 ஆயிரத்து 576 கோடி ரூபாய். இவ்வாறு வெறும் 3.3 விழுக்காடு அளவிற்கே உயர்வு. 2011-12ஆம் ஆண்டிற்கான திட்ட மில்லா செலவினங்களுக்கான (nடிn-ஞடயn நஒயீநனேவைரசந) பட்ஜெட் தொகை 8 லட்சத்து 16 ஆயிரத்து 182 கோடி ரூபாய். இது 2010-11ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்ட மதிப்பீட் டின் செலவினத் தொகையை விட 5 ஆயி ரத்து 370 கோடி ரூபாய் குறைவு. முக்கியமான மானியங்கள் பலவற்றைப் பெருமளவில் வெட் டிக் குறைத்ததன் காரணமாகவே இந்தக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. 2010-11ஆம் ஆண்டின் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டு டன் ஒப்பிடுகையில், பெட்ரோலியப் பொருட் களுக்குக் கொடுத்து வந்த மானியம் 14 ஆயி ரத்து 746 கோடி ரூபாய் அளவிற்கும், உரங் களுக்கான மானியத் தொகை 4 ஆயிரத்து 979 கோடி ரூபாய் அளவிற்கும், உணவு மானியங் கள் 27 கோடி ரூபாய் அளவிற்கும் வெட்டிக் குறைக்கப் பட்டிருக்கின்றன. ராணுவத்திற்கு ஒதுக்கியது தவிர திட்டமில்லா மூலதனச் செலவினம் 14 ஆயிரத்து 484 கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக்கிறது. இது 2010-11 ஆம் ஆண்டிற்கான வருவாய் செலவினத்தைவிட 50 விழுக்காட்டிற்கும் அதிகமான தொகை யாகும்.

அதேபோன்று விவசாயிகள் கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரணத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையும் 50 விழுக்காடு அளவிற்கு வெட்டப்பட்டிருக்கிறது. அதாவது 2010-11ஆம் ஆண்டிலிருந்த வருவாய் செலவினத்தில் 2010-11ஆம் ஆண்டில் 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது 2011-12இல் அது 6 ஆயிரம் கோடி ரூபாயாக வெட்டப்பட்டிருக்கிறது.

விவசாயத் துறைக்கும் கிராமப்புற வளர்ச் சிக்கும் தனிக் கவனம் செலுத்தப் பட்டிருப்ப தாக சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இது மிகவும் விந்தையாக இருக்கிறது. உண்மை யில் மத்தியத் திட்டச் செலவினங்களில் கிரா மப்புற வளர்ச்சி, விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கும் மற்றும் பாசனவசதிக் கும் மிகச் சிறிய அளவிலேயே தொகை அதி கரிக்கப்பட்டிருக்கிறது. 2010-11ஆம் ஆண் டின் வருவாய் செலவினத்தில் 70 ஆயிரத்து 213 கோடி ரூபாயாக இருந்தது, இப்போது 2011-12ஆம் ஆண்டின் பட்ஜெட் மதிப்பீட் டில் 70 ஆயிரத்து 597 கோடி ரூபாயாக குறிப் பிடப்பட்டிருக்கிறது. ரூபாயின் உண்மை மதிப் பில் இது கணிசமான அளவிற்கு குறைவான தாகும். எனவே விவசாயத் துறைக்கு குறிப் பிடத்தக்க அளவிற்குக் கவனம் செலுத்தப்பட் டிருப்பதாகக் கூறுவதில் பொருளேதுமில் லை. நிதி அமைச்சரின் பட்ஜெட் உரையை, அவர் சமர்ப்பித்துள்ள 2011-12ஆம் ஆண்டிற் கான பொருளாதார ஆய்வறிக்கை (எகனாமிக் சர்வே)யுடன் சேர்த்துப் பார்த்தோமானால், கிடைத்திடும் முடிவு வேறாக இருக்கிறது. உணவுப் பொருள்களின் விலைகள் மிக அதிகமாக உயர்ந்திருப்பதற்கு உணவுப் பொருள்களின் விநியோகத்திலும் சந்தை அமைப்பிலும் உள்ள குறைபாடுகளுக்குக் கவனத்தை ஈர்த்துள்ள நிதி அமைச்சர், இதற்குப் பிரதான காரணம் சில்லரை வர்த்தக வலைப் பின்னல்தான் என்றும்கூறி, இதற் குத் தீர்வு, பன்னாட்டு நிதிநிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீட்டை சில்லரை வர்த்த கத்தில் அனுமதிப்பதே வழி என்கிற வரைக் கும் சென்றிருக்கிறார். கார்ப்பரேட் நிறுவனங் களுக்குப் பிரியமான நிகழ்ச்சிநிரலை இவ் வாறு நிதி அமைச்சர் கூறியிருப்பதால்தான் கார்ப்பரேட் நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் ஊடகங்களும் பட்ஜெட்டை வெகு வாகப் புகழ்ந்து தள்ளியுள்ளன.

மேலும் நிதி அமைச்சர் அவர்கள், “...மக்களின் வருமானம் அதிகரித்திருப்பதன் காரணமாக அவர்கள் வாங்கும் உணவுப் பொருள் களின் தேவைகளும் வளர்ந்து கொண்டிருப் பதால்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டம் போன்ற அரசின் திட்டங்களால் கிராமத்தில் வாழும் பெரும் பான்மை மக்களின் வருமானம் அதிகரித்து விட்டதாகவும், அதனால்தான் உணவுப் பண வீக்கத்தின் விகிதமும் உயர்ந்துவிட்டதாகவும் எந்தவிதக் கூச்சநாச்சமுமின்றிக் கூறி வரும் அரசின் குரலையே நிதி அமைச்சரும் இவ் வாறு பிரதிபலிக்கிறார். மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்ததால்தான் பணவீக்கம் ஏற்பட்டிருக்கிறது என்ற கூற்றுக்கு அனுபவ ரீதியாக அர்த்தம் ஏதுமில்லை. இவர்கள் பொருள்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதையே பார்க்க மறுக்கிறார்கள். அர சாங்கமானது விவசாய உற்பத்தியைப் பெருக் குவதற்கும், உற்பத்தியாகும் பொருள்களை சேமித்து வைத்திட, பதப்படுத்திட, ஓரிடத்தி லிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல் லும் போக்குவரத்து வசதிகளைச் செய்துதரு தல் உட்பட கிராமப்புறத்தின் கட்டமைப்பு வச திகளை மேம்படுத்துவதற்கும் ஆக்கபூர்வ மான நடவடிக்கைகளை எடுத்திட வேண் டும். ஆனால் அரசாங்கம் இவ்வேலைகளை எல்லாம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் துறையிடம் அளித்திட முடிவு செய்திருப்பதாகவே தெரிகிறது. இதற்காக அவர்களுக்குத் தேவையான ஊக்கத்தொகை களை அளித்திட உரிய சட்டத் திருத்தங் களைக் கொண்டுவரவும் யோசித்துக் கொண் டிருப்பதாகத் தெரிகிறது. மேலும் பட்ஜெட் உரை யில், உணவுப் பொருள்களின் விலை உயர் வுக்கு முக்கிய காரணமான ஊக வர்த்தகம் குறித்து எதுவும் கூறாது மவுனம் சாதித் திருக்கிறது.

தற்போதைய மக்களவை 2009இல் அமைக்கப்பட்டதை அடுத்து உடனடியாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய, தற்போ தைய குடியரசுத் தலைவர் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு குறித்து ஓர் உறுதிமொழியினை அளித்தார். இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அந்த உறுதிமொழி இன்னமும் உறுதிமொழியாகவே நீடிக்கிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு குளிர் பதன அறையில் வைக்கப்பட்டு விட்டதா கவே தோன்றுகிறது. 2010-11 வருவாய் செல வினத்துடன் 2011-12 பட்ஜெட் மதிப்பீட்டை ஒப்பிடுகையில், உணவு மானியத்தில் கடு மையான அளவிற்கு குறைவு காணப்படு கிறது. ஆனால் அதே சமயத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 2008-09ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. அரசாங்கத்தில் சில குரல் கள் இதற்கு எதிராக எழுந்துள்ள போதிலும் இந்நடவடிக்கைகள் தொடர்கின்றன. இவ் வாறு வசதிபடைத்தோருக்கு அளிக்கப்பட் டுள்ள ஊக்கத்தொகைகள் 2009-10ஆம் ஆண்டில் 4 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது, 2010-11ஆம் ஆண்டிற்கு 5 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதே சமயத்தில் ஏழை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த மானி யங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை என்பது மிகச் சிறிய அளவிற்கே உயர்த்தப்பட்டிருக் கிறது. ஒரு நாயைக் கொன்று தொங்கவிடுவ தற்கு முன் அது குறித்து மோசமாகக் கூறிட வேண்டும் என்பது ஒரு தந்திரம். அதே போன்று வசதிபடைத்தோருக்கு அளித்தால் அது ஊக்குவிப்பு நடவடிக்கைகள். ஆனால் உணவுக்காகவும், எரிபொருள் களுக்காகவும் ஏழைகளுக்கு அளித்தால் அதன்பெயர் மானியங்கள்.

நிறைவாக, பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள எண்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. வரி வருவாயில் கணிசமான அளவிற்கு உயர்வு இருக்கும் என்றும், 2010-11ஆம் ஆண்டைவிட 2011-12ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 விழுக்காடு வளர்ச்சி இருக்கும் என்றும் உற்சாகத் துடன் குறிப்பிட்டிருக்கிறார். நிதி அமைச்ச ரின் மகிழ்ச்சியை நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ள முடியாது. ஏனெனில் கச்சா எண் ணெய்யின் விலைகள் மேலும் கூர்மையாக உயர இருக்கின்றன. இதனால் முன்னெப் போதையும்விட கடுமையாகப் பாதிக்கப்படப் போவது பாமர மக்கள்தான். இவ்வாறு மத்திய பட்ஜெட்டானது நாட்டில் வறிய நிலையில் வாடும் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வரப் போவதில்லை.

தமிழில்: ச.வீரமணி

கருத்துகள் இல்லை: