
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் வேலைக்குச் செல்வோர் முழுவதும் நாடியிருக்கும் இரண்டு விஷயங்களில் ஒன்று, மின்சார இரயில். மற்றொன்று, அவர்களுக்கான மதிய உணவை கொண்டு சேர்க்கும் டப்பா வாலாக்கள். அவர்கள் இதுவரைக்கும் எந்தவொரு காரணத்திற்காகவும் வேலை நிறுத்தமே செய்ததில்லை. இதுதான் முதல் முறை. நாடு முழுவதும் பெருமளவு விற்றுத் தீர்ந்த கதர் தொப்பிகள், “நான் அன்னாவின் ஆதரவாளன்” என வாசகம் பொறிக்கப்பட்ட டி.சர்ட்டுகள், மக்களின் கைகளில் ஒளிர் ந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்திகள் என பல்வேறு காட்சிகளை காண முடிந் தது

வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், எந்தவொரு எதிர்க்கட்சியாக இருந்தாலும், அது முதலா ளித்துவ சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டி ருந்தால் ஊழலை எதிர்த்து உறுதியாக போராட முடியாது. ஏனெனில் முதலாளித் துவ அரசியல் என்பதே ஊழலை உள்ள டக்கியது தான். ஆளும் கட்சியை பல வீனப்படுத்தவும், அதன் மூலம் கிடைக்கும் அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே அவர்கள் களத்தில் நிற்பார்கள். சிறந்த உதாரணம், அன்னாவின் போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சி ஆதரிப்பது. எடியூரப்பாவிற்கு எதிராக கர்நாடக லோக் அயுக்தாவின் குற் றப்பத்திரிகை தாக்கல், குஜராத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக மோடி லோக் அயுக்தா அமைப்பை செயல்படவிடாமல் தடுப்பது போன்ற விஷயங்களும் இந்த நேரத்தில் நினைவில் கொள்ளத்தக்கது. இதுபோன்ற எதிர்க்கட்சிகளோடு, ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடும் இடதுசாரி கட்சி களையும் இணைத்து ஒன்றாக பார்ப்பது சரியான பார்வையாக இருக்காது

அதே போல நவீன தாராளமய கொள்கைகளின் அமலாக்கம் நடைமுறைப்படுத் தப்படும் போது, உடன் நிகழ்வாக ஊழலும் எழும். உலகில் பல நாடுகளில் இத்தகைய உதாரணங்களை காண முடியும். நவீன தாராள மய கொள்கைகளை அமலாக்கத் துவங்கிய பிறகு, பல நாடுகளில் ஏற்பட்ட பெரும் ஊழல்களை கட்டுப்படுத்த பல புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
ஆகவே ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது முப்பரிமாண கோணத்தில் முழு மையான வடிவம் கொள்ள வேண்டுமென் றால், அது அரசியலோடு இணைந்த போராட்டமாக நடைபெற்றாக வேண்டும். ஊழல் என்கிற அருவருப்பான கண்டு பிடிப்பை உலகிற்கு வழங்கிய தனியுடைமை முதலாளித்துவ அரசியலை புறக்கணிப் பதோடு, பொதுவுடைமை அரசியல் தான் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை தலைமை யேற்று நடத்த முடியும் எனகிற உண்மை யை எந்த தயக்கமும் இன்றி உரத்துச் சொல் லியாக வேண்டும்.
ஆர்.பத்ரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக