செவ்வாய், 26 ஏப்ரல், 2011

திமுகா இருண்டகால அரசின் கடைசிப் பரிசு


தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில், ஆட் சியைவிட்டு அகல இருக்கும் திமுக அரசு கடைசி காலத்திலும் மக்களுக்கு துன்பத்தையே அளித்துவிட்டுச் செல்கிறது. கடந்த 5 ஆண்டு களாக பொய்யான வாக்குறுதிகளையே அளித்து மக்களை ஏமாற்றி வந்த அந்த அரசு மின்வெட் டை மட்டும் மறைக்க முடியவில்லை.

கடந்த பல ஆண்டுகளாக மாநிலத்தில் அறி விக்கப்படாமல் இருந்த மின்வெட்டு கடந்த 3 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப் பட்டது. ஆனால், அறிவிக்கப்பட்டதற்கும் அதிக மாக மின்சாரத்தை வெட்டிய சாதனைதான் திமுக அரசின் சாதனையாகும். ஒரு காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து உபரி மின்சாரம் கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கு விற்ற நிலைமை மாறி, இன்று பல மாநிலங்களிடம் மின் சாரத்திற்காக கையேந்த வேண்டிய நிலை மையை திமுக அரசு ஏற்படுத்திவிட்டது.

வடசென்னையில் 1000 மெகாவாட், தூத்துக் குடியில் 2000 மெகாவாட், ஜெயங்கொண்டத் தில் 1000 மெகாவாட் என்று அறிவிப்புகளை சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் பட்ஜெட் உரையின்போது வெளியிடுவதையே வழக்கமா கக் கொண்ட திமுக அரசு, அந்த திட்டங்கள் நிறைவேற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில் லை என்பதைத்தான் மாநிலத்தில் நிலவும் மின்பற்றாக்குறை எடுத்துக்காட்டுகிறது.

கோடை காலத்தில் மின்வெட்டு கடுமை யாக இருக்கும் என்று தெரிந்துதான் சட்டப்பேர வைத் தேர்தலை ஏப்ரல் மாதத்திலேயே நடத்த வேண்டும் என்று திமுக அரசு ரகசியமாக தேர் தல் ஆணையத்திற்கு கோரிக்கை அளித்தது. மே மாதத்தில் தேர்தல் வைத்திருந்தால் திமுக வுக்கு டெபாசிட் கூட கிடைத்திருக்காது. தேர் தலை அவசர அவசரமாக நடத்துகிறார்கள் என்று ஆணையத்தின் மீது திமுக தலைமை பொரிந்து தள்ளினாலும் உள்ளுக்குள் மகிழ்ச்சி யாகவே இருந்தது.

இந்த நிலையில் மாநிலத்தில் மின்சார நிலைமை மிகக் கடுமையான நிலைக்கு சென்று விட்டதால், தமிழக அரசு வியாழனன்று அதிகா ரப்பூர்வமாக மின்வெட்டு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநி லங்களில் மின்பற்றாக்குறை உள்ளதாகவும், எனவே 50 கோடி ரூபாய் அளவிற்கு நாள்தோ றும் பிற மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை வாங்கியும் நிலைமையை சரிக்கட்ட முடியாமல் உள்ளது என்றும், எனவே வேறு வழியின்றி வீட்டு உபயோகத்திற்கான மின்சாரத்தில் நாள் ஒன் றுக்கு தற்போது இரண்டு மணி நேரம் மின் வெட்டு என்பதற்கு பதிலாக மூன்று மணி நேரம் பகலில் மின்வெட்டு செய்ய முடிவு செய்யப்பட் டுள்ளதாக அறிவித்துள்ளது.

தலைநகர் சென்னையில் இதுவரை மின் வெட்டு இல்லாமல் இருந்த நிலைமைக்கு மாறாக, நாள்தோறும் பகலில் ஒரு மணிநேரம் மின்வெட்டு செய்யவும் மின்வாரியம் முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக பெரிதும் வருந்து வதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியம் கூறியுள் ளது. சொன்னதை செய்த அரசு மட்டுமல்ல, சொல்லாததையும் செய்த அரசு திமுக அரசு என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது முதலமைச் சர் கருணாநிதியிலிருந்து அக்கட்சியின் கடைசி தொண்டர் வரை முழங்கியதைப் பார்த்தால் மின் வெட்டு என்ற திமுக அரசின் தேர்தல் அறிக்கை யில் இடம் பெறாத வாக்குறுதியைதான் சொன் னார்கள் போலும்.

1 கருத்து:

ramalingam சொன்னது…

இதற்கு மட்டும் கலைஞர் வாயே திறக்க மாட்டார். மின் வாரியம் மட்டும்தான் அறிக்கை விடும்.