ஞாயிறு, 19 ஜூன், 2011

கல்வி கொள்ளையில் சிறந்த தமிழ்நாடு

தடையற்ற கட்டணக்கொள்ளை

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள சூழலில், தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டண கொள்ளை பெற்றோர்களை மிகப்பெரும் அளவிற்கு பாதித்துள்ளது. இதனால் மாநிலத்தில் ஆங்காங்கே கல்விக் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்களை முறைப்படுத்திட, நீதிபதி கோவிந்தராஜன் குழு அமைக்கப்பட்டு, கட்டண விகிதம் தீர்மானிக்கப்பட்டது. இதுவே அதிகமாக இருந்தது. இக்கட்டணம் தங்களுக்கு போதாது என 6400 பள்ளி நிர்வாகங்கள் முறையீடு செய்த சூழலில், திமுக அரசு கட்டணத்தை மறு பரிசீலனை செய்திட நீதிபதி ரவிராஜபாண்டியன் குழுவை புதிதாக நியமித்தது.

இந்தக்குழு ஆறுமாத கால அவகாசத்தை எடுத்துக்கொண் டும் கூட, இந்தாண்டு பள்ளிகள் திறக்கும் வரையிலும் கூடுதலாக எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்ற கட்டண விபரங்களை அறிவிக்கவில்லை. இதற்கிடையில் குழுத் தலைவர் நீதிபதி ரவிராஜபாண்டியன் ராஜினாமா செய்துள்ளார். இப்போது அறிவிக்கப் பட்டுள்ள கல்விக் கட்டணம் முந்தைய கட்டணத்தை விட மிக அதிகமாக உயர்த்தப்பட் டுள்ளது. எடுத்துக்காட்டாக, சென்னை எஸ்பிஓஏ மெட்ரிக் பள்ளியின் 11வது வகுப்பிற்கான கட்டணம் ரூ.11 ஆயிரம் என்ப தை ரூ.25 ஆயிரம் என உயர்த்தி அறிவித்துள்ளது.

புதிய கட்டணம் குறித்த விபரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் உடன் அறி விக்காததால், பள்ளி நிர்வாகங் கள் ரகசியமாக வைத்துக் கொண்டு தங்கள் விருப்பத்திற்கு கட்டணத்தை வசூலித்துள் ளன. இதற்கும் மேலாக சீருடை கள், நோட்டுப்புத்தகங்கள் கட் டணத்தை சம்பந்தப்பட்ட பள் ளிகளே தீர்மானித்துக்கொள்ள லாம் என்று தடையற்ற கொள் ளைக்கு வாய்ப்பளித்துள்ளது. மக்களை மிக மோசமாக பாதிக்கும் நீதிபதி ரவிராஜ பாண்டியன் குழுவின் கல்விக் கட்டண அறிவிப்பில் அரசு தலையிடுவதில் சட்டக்குறுக் கீடுகள் இருக்குமானால், அவ சரச் சட்டத்தின் மூலம் திருத் தம் கொண்டு வந்து, அரசு தலை யிட்டு திரும்பப் பெற வேண் டும். கடந்த ஆண்டின் கல்விக் கட்டணத்தை இந்த ஆண்டும் அமல்படுத்திட வேண்டும். வங்கிக் காசோலைகள், வரை வோலைகள் மூலம் மட்டுமே கட்டணம் பெறுவதை கட் டாயப்படுத்த வேண்டும் என மாநில அரசை மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள் கிறது.

கல்வி உரிமைச்சட்டம்

அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2010ம் ஆண்டு ஏப்ரலில் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட் டம் ஏழைகளுக்கு கல்வி தரு வதற்கு சில திட்டங்களை உரு வாக்கியுள்ளது. எடுத்துக்காட் டாக, அனைத்து மட்ட தனி யார் கல்வி நிறுவனங்களிலும் 25 சதவிகித இடங்களை இல வச கல்விக்கு ஒதுக்கிட வேண் டும் என இச்சட்டம் குறிப்பிடு கிறது. இப்படிப்பட்ட சட்டத் தை தமிழகத்தில் அமலாக்கிட அதற்கான விதிகள் தமிழகத்தில் இதுகாறும் உருவாக்கப்பட வில்லை. காலதாமதமின்றி விதிகளை உருவாக்கி, இச்சட் டப் பயன்கள் தமிழகத்திற்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமச்சீர்க் கல்வி

சமச்சீர் கல்வி திட்டத்தில் பொதுப் பாடத்திட்டத்தை முற்றிலுமாக நிறுத்தி வைப்பது என்ற அதிமுக அரசின் முடிவு சரி அல்ல. இப்பிரச்சனை நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உச்சநீதிமன்றம் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு ஏற்கனவே உள்ள பொதுப் பாடத்திட்டத்தை அமலாக்க வேண்டும். 10 வரையிலான இதர வகுப்புகளுக்கு நிபுணர் குழு அமைக்கப்பட்டு, பரிந்துரை களைப் பெற்று மூன்று வாரங் களுக்குள் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. நிபுணர் குழுவிற்கு தமிழக அரசு கல்வியாளர்கள் என்று இரண்டு தனியார் பள்ளி உரிமையாளர்களை (கொள்ளை அடிப்பவர்களையே ) அறிவித்துள்ளது. இது ஏற்கக்கூடியதாக இல்லை. பொருத்தமான கல்வியாளர் களை இக்குழுவில் இணைக்க வேண்டும். திமுக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தில் பல அம் சங்களை அமலாக்கவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொதுப்பாடத்திட்டம் என்ற முதல் படியை இந்தாண்டு அமு லாக்கிக் கொண்டே, சமச்சீர் கல்வி சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் அமலாக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தீர்மானத்தின் ஒரு பகுதி.

கருத்துகள் இல்லை: