புதன், 13 ஜூலை, 2011

கம்யூனிஸ்டுகளைக் காப்பதற்கு மட்டுமல்ல!

மேற்கு வங்க கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக அனைத்து மாநில கட்சி அமைப்புகளும், மதச்சார்பற்ற சக்திகளும், இதர பகுதி ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய தருணமாக இக்காலத்தைக் கருத வேண்டியுள்ளது. பல்வேறு தளங்களில் சிறப்புறபணியாற்றிய கம்யூனிஸ்டுகள் மீது தாக்குதல் தொடுப்பது என்பது நபர்கள் மீதான தாக்குதலாக கருதமுடியாது. மாற்றுக் கொள்கை மீதான காழ்ப்புணர்ச்சியையும், அதை அழிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தையும் கொண்டதாக இருக்கிறது. ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்டுகள் பின்பற்றிய சமூக, அரசியல் நடவடிக்கைகளில் இருந்து இவற்றை அறிந்து கொள்ள முடியும்.

மதச்சார்பின்மை-சமூக நீதி பாதுகாப்பதில்

இந்தியா விடுதலை பெறும் சமயத்தில், பாகிஸ்தான் பிரிவினை காரணமாக எழுந்த வகுப்புக் கலவரம், அன்றைக்கு பொறுப்பில் இருந்த மௌண்ட் பேட்டனை அச்சம் கொள் ளச் செய்தது. பஞ்சாப் எல்லைக்கு ராணுவத் தையும், வங்காளத்தின் நவகாளி பகுதிக்கு, ராணுவத்துடன் ஒற்றை மனிதப் படையான காந்தியையும் அனுப்பப் போவதாக மௌண்ட் பேட்டன் தெரிவித்தார். அந்த அளவிற்கு கொடிய கலவரம் நடந்த மேற்கு வங்கத்தில், 1977க்குப் பின்னர், எந்த ஒரு கொடிய சம்பவ மும் நடைபெறவில்லை. இந்திய அரசு ஏட் டளவில் கொண்டுள்ள மதச்சார்பின்மையை நடைமுறையில் அமலாக்கியதற்கான உதார ணம் மேற்கு வங்கமாகும். இந்தியாவில் முஸ் லிம் மக்கள் 13 சதவீதம் பேர் வசிக்கின்றனர். ஆனால் மேற்கு வங்கத்தில் 25 சதவீதம் பேர். முர்சிதாபாத் மாவட்டத்தில் 63 சதவீதம். ஜம்மு-காஷ்மீர், அசாம் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக மேற்கு வங்கம் இருக்கிறது. இருந்தபோதும், பெரும்பான்மை அல்லது சிறுபான்மை வகுப்புவாத சக்திகளின் வளர்ச் சிக்கு எந்த சூழ்நிலையிலும், இடது முன் னணி ஆட்சிக் காலத்தில் இடம் அளிக்கப் படவில்லை. அதுமட்டுமல்ல, சிறுபான்மை மக்களின் நலன் காப்பதில் முன்நின்று செயல்பட்ட அரசு மற்றும் அங்கிருந்த கம்யூ னிஸ்டுகள் விளங்கினார்கள்.

2008 டிசம்பரில் ரங்கநாத் மிஸ்ரா குழு வின் பரிந்துரை வெளிவந்தது. 2009 பிப்ரவரி யில், மேற்கு வங்கத்தில், 10 சதவீத இடஒதுக் கீடு இஸ்லாமிய மக்களுக்கு அமலாகும் என அறிவித்த ஒரே மாநில அரசு, இடது முன் னணி மட்டுமே. சமூக பொருளாதார அந்தஸ் தில் சிறுபான்மை மக்கள் முன்னேற்றம் காண வேண்டும் என்ற கண்ணோட்டத்தில், கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகள் இருந் தன. பழங்குடியினரைப் பொறுத்தளவில், இந் திய அளவில், 7.5 சதவீதம் என்றாலும், மேற்கு வங்கத்தில் 15.5 சதமானோர் ஆவர். இவர்க ளில் பெரும்பாலோர் நிலமுடையவர்கள் ஆவர். மேற்கு வங்கத்தில் 84 சதமான நிலத் தை சிறு மற்றும் குறு விவசாயிகள் கொண்டி ருப்பதாகவும், அதே நேரத்தில் இதர மாநிலங் களில் 48 சதமான நிலங்களையே சிறு விவ சாயிகள் கொண்டிருக்கிறார்கள் என்ற விவரத் தையும் மத்திய அரசு தெரிவிக்கிறது. தலித் சமூகத்தின் பங்களிப்பு மேற்கு வங்கத்தில் 29.2 சதவீதம் எனத் தெரிவிக்கின்றனர். இவர் களில் 19.45 சதமான மக்களைத் தவிர மற்ற அனைவருக்கும் நிலவிநியோகம் செய்யப்பட் டிருக்கிறது. அதாவது 80 சதமான தலித் மக் கள் நிலமுடையவராக இருக்கின்றனர், என்ற இணைய தளத் தகவல் சாதாரணமானது அல்ல, மிகப்பெரிய சாதனை. உண்மையான சமூக நீதியின் அடையாளமாக இடது முன் னணி ஆட்சி இருந்தது என்பதை சமூக நீதி ஆய் வாளர்கள் கவனிக்க வேண்டும்.

தொழிலாளர் நலனில்

இந்தியாவில் வறுமை ஒழிப்பு குறித்து, உலக வங்கி குறிப்பிடுகிற போது, மேற்கு வங்க இடது முன்னனி அரசு மற்ற மாநிலங் களை விடவும் சிறந்து விளங்குகிறது என கருத்து தெரிவித்துள்ளது. சரியான திட்டங் கள் கொண்டு செயலாற்றாமல், வறுமை ஒழிப்பில் முன்னேற்றம் காணமுடியாது. நிலச்சீர்திருத்தம் ஒரு காரணம் என்றால், மறுபுறம் தொழிலாளர் ஆதரவு நடவடிக்கை கள் சிறந்த முறையில் இடது முன்னணியி னால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் இறக்குமதிப் பொருளாதாரக் கொள் கையின் விளைவால், மேற்கு வங்கத்தில், மத் திய அரசு மற்றும் தனியார் ஆலைகள் சில மூடப் பட்டன. மைய அரசு கைவிட்ட தொழி லாளர்களுக்கு, மாதாந்திரம் ரூ.1500 வழங்க நடவடிக்கை எடுத்தது, இடது முன்னணி அரசு. வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் 17 லட்சம் அணிதிரட்டப்படாத தொழிலாளர் களை உறுப்பினராக்கிய பெருமை இடது முன் னணிக்கு உண்டு. வேறு எந்த மாநில அரசும் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஜனநாயகம் காப்பதில்

மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சி இருந்த போது, தேசம் முழுமைக்கு மான ஜனநாயகம் காப்பதில், சீரிய பங்களிப்பு செய்துள்ளனர். இன்றைய மாநில கட்சிகள் மிகப் பெரிய சக்தியாக, மத்திய ஆட்சியில் வளர்ந்துள்ளன. குறிப்பாக 1996க்குப் பின்னர், மாநில ஆட்சிகள் எதுவும் 356 சட்டத்தைப் பயன்படுத்திக் கலைக்கப் படவில்லை. எடுத்த ஒன்றிரண்டு முயற்சிகளும், தோல்வி யைத் தழுவியுள்ளன. நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பங்களிப்பே, இத் தோல்விகளுக்குக் காரணம் என்றால் மிகை யல்ல. மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே, 355வது பிரிவைப் பயன்படுத்தி, மாநில ஆட்சியை தேவையை யொட்டி நிர்ப்பந்திக்க முடியும். எனவே 356வது பிரிவை முற்றாக நீக்குவதே சரி, என்ற ஒரே நிலைபாட்டை, எல்லா காலங்களிலும் மேற்கொண்டுள்ளது. மாநில கட்சிகளில் சில, தாங்கள் ஆட்சியில் இல் லாத நிலையில், 356ஐப் பயன்படுத்து என நிர்ப்பந்தித்தது உண்டு. 1957ல் கேரளத்தில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைக் கலைத்த பிறகு 100க்கும் மேற்பட்ட முறையில் 356வது பிரிவு பயன்படுத்தப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாக்கப்பட்டுள்ளது. மேற்கு வங் கத்தில் 1967, 69 ஆகிய காலங்களில் மார்க் சிஸ்ட் கட்சி பங்கேற்ற கூட்டணி ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. 1977ல் இடது முன் னணி ஆட்சி அமைந்த பின் நாடு தழுவிய முறையில் நடத்திய போராட்டங்கள் மற்றும் 1996க்குப்பின் முடிவுக்கு வந்தது தனிக்கட்சி ஆட்சி.

ஜோதிபாசு முதல்வராக இருந்தபோது, பல பத்தாண்டுகளாக கிடப்பில் கிடந்த கங்கை நதிநீர் பகிர்மானம் குறித்து, வங்க தேசத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி முடி வுக்கு வந்தது. மாநில ஆட்சியதிகாரத்தின் வரம்பிற்குள்ளாக, பழங்குடி மக்களுக்கான வளர்ச்சிக் கவுன்சில், பிரத்யேக பிரிவு மக்க ளுக்கு தன்னாட்சி அதிகாரம் ஆகியவற்றை முன்மொழிந்து செயல்படுத்தியது இடது முன் னணி. இது இந்தியாவிற்கே முன்னுதா ரணமாக இருந்தது.

மேற்குறிப்பிட்டவை தவிர, இந்திய மக்க ளைப் பொருளாதாரக் கொள்கைகள் மூலம், விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, நடுத்தர வர்க்கத்தைப் பாதிக்கும் பல்வேறு கொள்கைகள் மூலம் மத்திய அரசு தாக்குதல் தொடுத்த நேரங்களில், அவற்றை எதிர்த்த வலுவான போராட்டங்களை கிழக்கு மூலையில் கம்யூனிஸ்ட்டுகள் நடத்தியதன் காரணமாகவே, ஓரளவு கட்டுக்குள் இருந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை மற்ற எல்லா மாநில மக்களையும் விட முன்னணி யில் நின்றவர்கள் மேற்கு வங்க உழைப்பாளி மக்கள். இதில் கம்யூனிஸ்டுகளின் பங்கு குறைத்து மதிப்பிட முடியாதது. இப்படி எல் லாப் பகுதி மக்களின் நலனுக்காகவும் செயல் பட்ட கம்யூனிஸ்டுகள் மீது தாக்குதல் தொடுப்பதை ஜனநாயக சக்திகள் கவனத் தில் கொள்ள வேண்டும். மேலே விவரிக்கப் பட்ட அம்சங்களில் இந்திய ஆளும் வர்க்கத் திற்கு எதிரான, தொழிலாளர் வர்க்கத்திற்கான மாற்று அணுகுமுறையுடன், இடது முன்னணி அரசு பயணப்பட்டது, என்பதே பிரதானமா னது. ஆகவேதான், ஆட்சி மாற்றம் நடந்த உடன் கம்யூனிஸ்ட்டுகள் மீது வெறித்தன மான தாக்குதல் தொடுக்கப் படுகிறது.

மேற்குவங்க முதல்வராக பொறுப்பு எடுத்துக் கொண்ட மம்தாவைச் சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் மகஜர் ஒன்றை அளித்துள்ளனர். அதில், 15 வது சட்டசபைத் தேர்தல் முடிந்த காலம் துவங்கி, 13 மே 2011, சட்ட சபைத் தேர்தல் முடிவுகள் வந்த நாட் கள் வரையிலும் 425 தோழர்கள் படு கோர மான தாக்குதல்களுக்கு ஆளாகி, மருத்துவ மனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 12 தோழர்கள் கொல்லப் பட்டுள்ளனர். இவர்கள் அல்லாது பலநூறு நபர்கள் தாக்கப்பட்ட நிலையில் கொடுத்த புகார்களை, காவல் நிலையத்தில் ஏற்க மறுக்கும் அவலம் இருப் பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி வருகின்ற னர். 412 கட்சி அலுவலகங்கள் சூறையாடப் பட்டுள்ளன. பலவும் தரை மட்ட மாக்கப் பட் டுள்ளது. 445 தொழிற் சங்க, இதர வெகு மக் கள் அமைப்புகளின் அலுவலகங்கள், ஆயுத முனையில் கைப்பற்றப் பட்டுள்ளன. 157 அலுவலகங்களைப் பூட்டி சாவிகளை எடுத் துக் கொண்டுள்ளனர். 9 கல்லூரிகளில் உள்ள மாணவர் பேரவை அலுவலகங்களும், அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதற்கு கார ணமாக மேற்படி அலுவலகங்களில் ஆயுதங் கள் வைக்கப் பட்டிருந்தது, எனவே அதைக் கைப்பற்றுவதற்காக, இந்த அலுவலகங் களைப் பூட்டுவது தவிர்க்க முடியாததாகிவிட் டது என்ற நாடகத்தை அரசு அரங்கேற்று கிறது. இக்கூற்று உண்மையானால் கம்யூ னிஸ்டுகளின் வீடுகள் பல ஆயிரக் கணக் கில் சூறையாடப் பட்டதற்கும், 30 ஆயிரத்திற் கும் அதிகமான பொது மக்கள் தங்கள் வீடு களை விட்டு விரட்டப்பட்டதற்கும் காரணம் என்ன? இடது முன்னணி பொறுப்பு வகிக்கும் பஞ்சாயத்து அலுவலகங்கள், அரசின் பொது சொத்து என்பதைக் கூட மறந்து, தாக்கப் பட் டதற்கு வன்மம் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும். எனவே இவை திட்டமிட்டு கம்யூனிஸ்டுகள் மீது சுமத்தப்படும் புகார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர். மம்தா அரசு இக்கோரிக்கைகளுக்கு செவிசாய்க் காது, என்பது நன்கு அறிந்த ஒன்று. இருந்த போதும், மேற்கு வங்க இடதுசாரி இயக்கத் தலைவர்களின் செயல், மக்கள் இயக்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையாகும்.

தற்போது நாடுமுழுவதும் நடத்தப் படுகிற ஆதரவு இயக்கம், கம்யூனிஸ்டுகளைக் காப்பதற்காக மட்டுமல்ல. நாட்டை ஜனநாயகப் பாதையில் தீவிரமாக கொண்டு செல்வதில் ஏற்பட்டுள்ள பின்னடைவைப் புரிந்து, மாற்றுக் கொள்கைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதே ஆகும்.

எஸ்.கண்ணன்

கருத்துகள் இல்லை: