திங்கள், 27 ஏப்ரல், 2009

பாஜகவின் நயவஞ்சக நாடகம்!

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

பாஜக தன்னுடைய ‘‘தொலை நோக்குக் கொள்கைகளை’’ தவணை முறையில் வெளியிடும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. உலகப் பொருளாதார மந்தத்தை அடுத்து, கட னைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்துதல்போல் தங்கள் கொள்கை களையும் மாற்றி அமைத்துக் கொண்டி ருக்கிறது. உலகப் பொருளாதார மந்தத் தை அடுத்து அதனை எதிர்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் குறித்துச் சரி யான பார்வை தங்களுக்கு இல்லாதது இதற்குக் காரணங்களாக இருக்கலாம். அல்லது, மக்களுக்கு தாங்கள் முன்பு அளித்த உறுதிமொழிகளிலிருந்து முரண் படுவதற்கும் மாற்றிச் சொல்வதற்கும் இது வசதியாக இருக்கும் என்று கருது வதும் கூட இதற்குக் காரணங்களாக இருக்கலாம்.

இப்போது வெளிவந்துள்ள பாஜக-வின் தேர்தல் அறிக்கையானது ஏராள மான வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந் தாலும், இதற்குமுன் அவர்கள் அளித் திட்ட தேர்தல் வாக்குறுதிகளில் உள்ள அம்சங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும், இரு அம் சங்கள் குறித்து நாம் எதுவும் சொல்லா மல் இருக்கமுடியாது. முதலாவதாக, 1998க்கும் 2004க்கும் இடையில் அவர் கள் அரசாங்கத்தை நடத்திய காலத்தில் இந்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து அவர்களுக்கிருந்த அணுகு முறை இதில் மறுதலிக்கப்பட்டிருக்கிறது. அப்போது அவர்கள் பொதுத்துறையைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கான நடவடிக்கைகளைப் படிப்படியாகச் செய் வதற்கென்று ஓர் அமைச்சகத்தையே (ஆinளைவசல கடிச னளைinஎநளவஅநவே) உருவாக்கி இருந்தார்கள். அப்போது நடைபெற்ற ஊழல்கள் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அடித்த கொள்ளைகளை எல்லாம் நினைவுகூருங்கள். 2004இல் ஐமுகூ ஆட்சிக்கு வந்த சமயத்தில் இடதுசாரிகளிடமிருந்து வந்த நிர்ப்பந் தத்தின் காரணமாக, ஐமுகூ அரசாங்கம் மேற்கொண்ட முதல் நடவடிக்கையே, அந்தத் துறையை ஒழித்துக் கட்டியது தான்.

இப்போது பாஜக வெளியிட்டிருக்கும் தொலைநோக்கு ஆவணத்தில், அவர்கள் கூறுவது என்ன? ‘‘ கடந்த பல ஆண்டு களாக நன்கு கட்டி வளர்க்கப்பட்டுள்ள இந்தியப் பொதுத்துறையானது நம் நாட் டின் பெருமைமிகு சிறப்பம்சமாகும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங் கம் பொதுத்துறையை வலுப்படுத்தும், இந்தியாவின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதனைப் பயன் படுத்திக் கொள்ளும். அதே சமயத்தில், இதில் தனியார் துறையும் பங்கெ டுத்துக் கொள்வதற்கான வகையில் தனியார் துறைக்கு ஆக்கமும் ஊக்கமும் முழு மையாக அளிக்கப்படும். அரசாங்கம் - தனியார் ஒத்துழைப்பு (ஞரடெiஉ-ஞசiஎயவந ஞயசவநேசளாiயீ) அடிப்படையில், அரசாங்கத்தின் துறைகளை வளர்த்திட, அரசாங்கம் முழு மையாகப் பயன்படுத்திக் கொள்ளும்.” இது எப்படி இருக்கிறது? நாம் முன்பே சொன்னதுமாதிரி, பாஜக தங்களுடைய முந்தைய நிலைபாட்டிலிருந்து தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டிருக்கிறது. பொதுத்துறையைச் சார்ந்திருக்கும் வாக்காளர்களை முழுமையாக ஏமாற்றி அவர்களது வாக்குகளை அபகரிக்கும் முயற்சி என்பதைத் தவிர இது வேறொன்றுமில்லை.

இவர்கள் கூறுவதில் உள்ள இன் னொரு முக்கிய அம்சம், அரசாங்கம் - தனியார் ஒத்துழைப்பு என்பதாகும். காங் கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சி களுமே இதனைத் தூக்கிப் பிடிக்கின்றன. ஆயினும், கடந்த காலங்களில் நமக்கு ஏற் பட்டுள்ள அனுபவம் என்ன? விமான நிலையங்களை நவீனப்படுத்துவதற்கு, அரசாங்கம் - தனியார் ஒத்துழைப்பு முறையில்தான், ஆட்சியாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொண் டார்கள். ஆனால் இதில் சம்பந்தப்பட்ட தனியார் துறையினர், தாங்கள் போட்ட கணக்கு அனைத்தும் தப்புக்கணக்காய் மாறிப்போனதாலும், உலகப் பொருளாதார மந்தத்தை அடுத்து, விமானப் போக்கு வரத்தில் பயணிகள் வரவு மிகவும் குறைந்துபோனதாலும், அவர்கள் கடும் நஷ்டத்தை அடைந்தனர். விளைவு, அத னை விமானப் பயணிகள் தலையில் கட்ட அரசால் அனுமதிக்கப்பட்டிருக்கி றது. பெங்களூர் மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் வளர்ச்சிக் கட்டணம் என்ற பெயரில் அநியாயமான அளவிற்கு லெவி ஒவ்வொரு பயணியிடமிருந்தும் வசூலிக்கப்படுகிறது. இதுதான் அர சாங்கம் - தனியார் ஒத்துழைப்பில் உள்ள சூட்சுமம். அதே சமயத்தில் அரசாங்கம் நடத்திடும் விமான நிலையங்கள் நிலை மை என்ன? அவை நட்டத்தில் இயங்கி னாலும் கூட அதன் சுமையை பயணிகள் தலையில் கட்ட அனுமதிக்கப்படுவதில் லை. இவ்வாறு, பாஜக-வின் தொலை நோக்குப் பார்வையானது, மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றுவதற்கான ஒன்று என்பது தெளிவு.

இவ்வாறு நேரத்திற்கு ஏற்றாற்போல, பேசுவதென்பது பாஜகவின் நடைமுறை என்பது, இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து தங்கள் நிலைபாட்டை அவர்கள் முற்றிலுமாக மாற்றிக் கொண்டி ருப்பதிலிருந்து தெளிவாகிறது. 2007 நவம்பர் 28 அன்று, மக்களவையில் இந் திய - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று அத்வானி கூறியதாவது:

“123 ஒப்பந்தமானது, தற்போதுள்ள நிலையில், நாட்டிற்கு உகந்ததல்ல, ஏற்றுக்கொள்ளத் தக்கதுமல்ல. ஏனெ னில் இது இந்தியாவின் கேந்திரமான மற் றும் நீண்டகால நலன்களுக்கு விரோத மானது. மீண்டும் தேஜகூ ஆட்சிக்கு வந் தால், இந்த ஒப்பந்தத்தை நாங்கள் மறு பரிசீலனைக்கு உட்படுத்துவோம். இதில் உள்ள நாட்டின் நலன்களுக்கு விரோத மான அம்சங்கள் அனைத்தும் நீக்கப் படும், அல்லது இந்த ஒப்பந்தமே முழு மையாக ரத்து செய்யப்படும்.’’

ஆனால், இப்போது அவர் என்ன கூறுகிறார்? “அரசாங்கம் என்பது தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நடைமுறையைக் கொண்டதாகும். அயல்நாடுகளுடன் முந்தைய அரசாங் கங்கள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங் களை அவ்வளவு எளிதாகத் தூக்கி எறிந் துவிட முடியாது.” ஒப்பந்தத்தை “முழு மையாக” ரத்து செய்வதிருக்கட்டும், இதனை “மறுபரிசீலனைக்கு” உட்படுத் தக்கூட இவர்கள் தயாராயில்லை. அதே போன்று, “மறுபரிசீலனை” என்கிற வார்த் தை, பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் எந்தப் பக்கத்திலும் காணப்படவில்லை.

இவ்வாறாக, இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, தங் களுடைய அமெரிக்க ஆதரவு நிலைப் பாட்டை மூடிமறைத்திடும் முயற்சியின் ஒரு பகுதியாக, பாஜக நாட்டை தவறான பாதையில் இட்டுச் செல்கிறது என்பது தெளிவு. இன்னும் சரியாகச் சொல்வ தென்றால், பாஜக தலைமையிலிருந்த தேஜகூட்டணி அரசாங்கம்தான், அமெ ரிக்க ஏகாதிபத்தியத்துடன் இந்தியா ராணுவரீதியான கூட்டணியை ஏற்படுத் திக் கொள்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிய ஒன்றாகும். இவர்கள் ஆட்சி யிலிருந்த காலத்தில்தான் இஸ்ரேலுட னான உறவுகள் மேலும் வலுப்பட்டன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவரு டியாக, தேஜகூட்டணி அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை, மன் மோகன் சிங் தலைமையிலான ஐமுகூ அரசாங்கமும் மிகவும் நன்றாகவே தொடர்ந்து செயல்படுத்தியது.

பாஜகவின் நயவஞ்சக விளையாட் டுக்கள் இவ்வாறு தொடர்கின்றன. மக் களிடம் வெளியே சொல்வதற்கு முற்றி லும் விரோதமான வகையிலேயே அவர் களின் உண்மையான நிகழ்ச்சிநிரலும் உள்ளார்ந்த எண்ணங்களும் இருந்திடும். இதற்கு சரியான உதாரணம், அரசியல மைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள, நவீன இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை ஏற்றுக் கொள்வதாகக் இவர்கள் கூறுவதை குறிப்பிடலாம். ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஓர் அரசியல் அங்கமாகச் செயல்படும் இவர்களுக்கு, இக்குடியரசை, வெறி பிடித்த சகிப்புத் தன்மையற்ற பாசிச “இந்து ராஷ்ட்ர”மாக மாற்ற வேண்டு மென்பதே குறிக்கோளாகும். தெளிவான இந்தக் காரணத்திற்காகத்தான் இவர்கள் எவ்விதத்திலும் ஆட்சியதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாது என்கிறோம். எனவே தான், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சிறந்ததோர் எதிர்காலத்தை அமைத்திட, இந்திய மக்கள் நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மதச்சார்பற்ற மாற்று அரசாங்கத்தை அமைத் திட வேண்டும் என்று கோருகிறோம்.

தமிழில்: ச.வீரமணி

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Visit www.maduraicpmmohan.wordpress.com and www.votebellarmin.blogspot.com