புதன், 11 ஆகஸ்ட், 2010

ஹிரோஷிமா- நாகசாகி ஆதிக்கத்தை நிலைநாட்ட அணுகுண்டு வீச்சு

(நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி)

அணுகுண்டு வீசப்படுவதை எதிர்த்த ஸிலார்ட் ஒரு கடுமையான கருத்துப் போரையே நடத்தினார். நோபல் பரிசு பெற்ற ஜேம்ஸ் ஃபிராங்க் என்பவர் பெயரில் இயங் கிய ஃபிராங்க் குழுவில் மற்றவர்களுடன் அவர் இணைந்து அணு ஆயுதத்தைப் பயன் படுத்துவதற்கு எதிரான விவாதங்களில் ஈடு பட்டார். ஜப்பானைச் சரணடையச் செய்வ தற்கு அணுகுண்டின் வல்லமையை நிரூபிக் கும் வகையில் பொதுமக்கள் பார்வைக்கு ஒரு சோதனையைச் செய்தாலே போதுமானது என்று அக்குழுவினர் யோசனை தெரிவித்த னர். போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை உடனடியாக நிறை வேற்றவில்லையெனில் உலகில் பயங்கர மான ஆயுதப் போட்டியே நிகழும் என்று அவர்கள் வலிமையாக வாதிட்டனர். அது எவ்வளவு தீர்க்கதரிசனமானது !

“நாஜிக்களுடைய அக்கிரமங்களுக்கு எதி ராக எதிர்ப்பு தெரிவிக்காத ஜெர்மானியர்களின் மவுனம் உலகெங்கிலும் பரவலாகக் கண்டிக் கப்பட்டது. மான்ஹட்டன் சோதனைத் திட் டத்தில் உள்ள விஞ்ஞானிகளாகிய நாம் அணு ஆயுதத்திற்கு எதிராகப் பேசத் தவறினால், ஜெர்மானியர்களுக்குக் கிடைத்த மன்னிப்பு கூட நமக்குக் கிடைக்காது” என்றார் ஸிலார்ட்.

இதற்காகவெல்லாம் ஜெனரல் குரோவ்ஸி னால் உளவாளி என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகவேண்டிய ஆபத்தினை அவர் எதிர் கொண்டார். ஸிலார்டினுடைய முயற்சிகள் அமெரிக்க அதிபர், ராணுவத் தலைமை மற்றும் இதர விஞ்ஞானிகளிடம் எந்த மனமாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. (புதிய ஆயுதத்தைக் கண்டுபிடிக்கும்வரைதான் ஆட்சியாளர்களுக்கு விஞ்ஞானிகளின் உதவி தேவை. ஆயுதத்தைக் கண்டுபிடித்த பிறகு, அதை யார் மீது பயன்படுத்த வேண்டும், எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதெல் லாம் அரசியல் முடிவுகள். அதை விஞ்ஞானி கள் தீர்மானிக்க முடியாது என்பதற்கு சிறந்த உதாரணம் அணுகுண்டு வீச்சுதான்)

ஓப்பன்ஹீமர், காம்ப்டன், ஃபெர்மி மற்றும் லாரன்ஸ் ஆகிய விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவும் ஸிலார்ட் முன்வைத்த வாதங்களை நிராகரித் தது. அணு ஆயுதத்தை உடனே பயன்படுத்த வேண்டுமென அது பரிந்துரைத்தது !

இவர்களெல்லாம் மிகச் சிறந்த விஞ்ஞானி கள் என்பதில் சந்தேகம் இல்லை. நோபல் பரிசு பெற்றவர்கள். மேதைமைத்தனமும் மனித நேயமும் சேர்ந்தே இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

ஜூலை 16 அன்று

டிரினிட்டி சோதனை

டிரினிட்டி அணுகுண்டு சோதனை பெரிய அளவுக்கு வெற்றியைப் பெற்றது. 6 கிலோ கிராம் புளூட்டோனியம் 20,000 டிஎன்டி சக்தி யுடன் நியூ மெக்சிக்கோவின் பாலைவனங்க ளின் மேல் வெடித்துச் சிதறியது. கதிர்வீச்சி னால் 20 மைல் தூரம் தள்ளியிருந்த குடும்பங் கள் கூட பாதிப்புக்கு உள்ளாகின. கதிர்வீச் சின் விளைவுகளைக் கண்காணித்துக் கொண்டிருந்த விஞ்ஞானிகளும் கடுமை யாகப் பாதிக்கப்பட்டனர். 20 மைல்களுக்கு அப்பால் இருந்த என்ரிக்கோ ஃபெர்மி அணு குண்டின் வலிமையைக் கையில் சில தாள் களை வைத்துக் கொண்டு கணக்கிட்டுக் கொண்டிருந்தார். தாள்கள் 9 அடி தூரத்திற்கு தூக்கியெறியப்பட்டன. தரைமட்டத்தில் குண்டின் சக்தி 10,000 டன் டிஎன்டிக்குச் சமமாக இருக்கும் என அவர் மதிப்பிட்டார்.

“அணுகுண்டு வேலை செய்யும் எனத் தெரிந்துவிட்டது... உலகம் இதுவரை இருந்த மாதிரி இனி இருக்காது. சிலர் சிரித்தனர், சிலர் அழுதனர், பெரும்பாலான மக்கள் அமைதி யாக இருந்தனர். இந்துமதப் புனித நூலான பகவத்கீதையின் `தற்போது நான் உலகங் களை அழிக்கக் கூடிய மரணமாக இருக்கி றேன்’ என்ற வரி நினைவுக்கு வருகிறது” என்றார் ஓப்பன்ஹீமர்.

ஸ்டாலின், சர்ச்சில், ட்ரூமன் சந்திப்பு

ஜோசஃப் ஸ்டாலினைச் சந்திப்பதற் கான தேதியை டிரினிட்டி சோதனைக்குப் பின்னர் இருக்குமாறு தேர்வு செய்கிறார் ட்ரூமன். அந்த சந்திப்பு ஜூலை 24 அன்று பெர்லின் அருகே உள்ள போட்ஸ்டாமில் ஹேவல் நதிக்கரையில் இருந்த செசி லிநாஃப் அரண்மனையில் நிகழ்ந்தது.

இந்த செய்தியை ஸ்டாலினிடம் தெரி வித்த விதமே ஒரு சுவாரசியமான நாடகம் போல் நடந்தது. தன்னுடைய வெளியுறவுச் செயலாளர் ஜேம்ஸ் பைர்னஸிடமும் வின்ஸ் டன் சர்ச்சிலிடமும் செய்தியைக் கேட்டபிறகு ஸ்டாலினுடைய முகபாவங்கiளைப் பார்த்து அவர் புதிய ஆயுதத்தின் பயங்கரத்தன்மை யைப் புரிந்து கொண்டாரா என்பதைக் கவ னிக்குமாறு ட்ரூமன் கேட்டுக் கொண்டாராம்!

ட்ரூமன் : ஜோசஃப், என்னிடம் உங்க ளுக்கு ஒரு செய்தி இருக்கிறது. மிக அதிக சக்தி வாய்ந்த ஒரு புதிய ஆயுதம் எங்களிடம் இருக்கிறது.

ஸ்டாலின் (முகபாவத்தில் பெரிய மாற்ற மில்லை) : அப்படியா? ஜப்பானியர்களுக்கு எதிராக அதை நீங்கள் பயன்படுத்திக்கொள் வீர்கள் என்று நினைக்கிறேன்.

ஸ்டாலினுடைய முகத்தைக் கவனித்த பிறகு, அவர் புதிய ஆயுதத்தைப் பற்றி ஒன்று பெரிதாக நினைக்கவில்லை, அல்லது அவர் கள் எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவில்லையென்று பைர்னஸும் சர்ச்சிலும் நினைத்தனர். (ஆனால் ஸ்டா லினா ஏமாறுவார்? தன்னுடைய பதட்டத்தை அவர் வெளியே காட்டிக் கொள்ளவில்லை, அவ்வளவுதான்! ) சோவியத் மார்ஷல் ஷுகாவ் தன்னுடைய நினைவுக் குறிப்பு களில் “உண்மையில் தன்னுடைய அறைக் குத் திரும்பிய பிறகு அணுஆய்வுத் திட்டத் திற்குப் பொறுப்பான விஞ்ஞானி குர்சடா விடம் விரைந்து செயலாற்றி அணு ஆயுதத் தை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டார்” என்று குறிப்பிடுகிறார்.

ஏகாதிபத்திய நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள...

பனிப்போரில் வலிமையான நிலையில் தன்னை வைத்துக்கொள்ள அணுகுண்டு உதவும் என்பதை அமெரிக்கா புரிந்துகொண் டது. அதனால் தன்னுடைய ஏகாதிபத்திய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள அணு ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டுமென அமெரிக்க அரசு விரும்புவது தெளிவாகத் தெரிந்தது என்கிறார் ஷுகாவ்.

அதுதான் அமெரிக்காவின் நோக்கம் என் பது ஆகஸ்ட் 6, 9 தேதிகளில் உலகிற்குத் தெளிவாகியது. ராணுவ நோக்கிலிருந்து எந்தத் தேவையும் இல்லாமலேயே மக்கள் தொகை அதிகம் கொண்ட அமைதியான ஜப் பான் நகரங்கள் ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கர்கள் அணுகுண்டைப் போட்டனர். (இந்த மாபாதகச் செயலுக்காக உலகெங் கிலுமிருந்து எழுந்த கண்டனங்கள் நிச்சயம் போதுமானவையல்ல. இன்றுவரை அமெ ரிக்கா தன் வருத்தத்தைத் தெரிவிக்க வில்லை. தனது செயலை நியாயப்படுத்தியே வருகிறது).

போர்ச் செயலாளர் ஸ்டிம்ஸனிடம் “ராணுவ நோக்கங்களுக்கே அணுகுண்டைப் பயன்படுத்த வேண்டும், ராணுவ வீரர்களே நமது இலக்கு-பெண்களும் குழந்தைகளும் அல்ல.. ஜப்பானியர்கள் காட்டுமிராண்டிக ளாக, ஈவிரக்க மில்லாத வெறிபிடித்தவர்களாக இருந்தாலும் கூட, பொதுநன்மைக்கான உலகத் தலைவர்களான நாம் (இவர்கள் பொதுநன்மைக்கான உலகத் தலைவர்களாம் ! அந்தப் பட்டத்தைத் தங்களுக்குத் தாங்களே சூட்டிக்கொள்வதில்தான் அமெரிக்கர்கள் வல்லவர்களாயிற்றே..?) அந்த பயங்கரமான குண்டை போடமுடியாது..” என்று கூறியதாக ட்ரூமன் தன் டயரியில் குறிப்பிடுகிறார். ஆனால் அணுகுண்டு பற்றிய ஆணையில் இந்த மாதிரி யார் மீது போட வேண்டும், யார் மீது கூடாது என்ற விவரங்களெல்லாம் இல்லை. ஹிரோஷிமாவும் கோக்குராவும் இறுதியில் தேர்வு செய்யப்பட்டன.

1945 ஆகஸ்ட் 6 அன்று காலையில் 8 மணிக்கு ஹிரோஷிமா மீது குண்டு போடப் பட்டது. இதை ஜெனரல் குரோவ்ஸ் பிற்பகல் 2 மணிக்கு ஓப்பன்ஹீமரிடம் இப்படித் தெரிவிக்கிறார் :

குரோவ்ஸ் : உங்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள் ! அணுகுண்டு வேலை செய்தது.

ஓப்பன்ஹீமர் : அது நன்றாக வெடித்ததா?

குரோவ்ஸ் : மிக அருமையாக, பெரிய சத் தத்துடன் வெடித்தது ! உங்களை இயக்குந ராக நான் தேர்ந்தெடுத்தது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஓப்பன்ஹீமர் : எனக்கு அதைப் பற்றி சந் தேகம் உண்டு, ஜெனரல் !

ஆகஸ்ட் 9 அன்று கோக்குராவுக்கு விமான ஓட்டிகள் சென்றபோது நகரைப் புகை சூழ்ந் திருந்தது. குண்டைப் போட இயலவில்லை. எனவே, இரண்டாவது தேர்வான நாகசாகி யை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். பாவம், நாகசாகி மக்கள் !

ட்ரூமனின் பொய்யுரை

ட்ரூமன் ரேடியோவில் உரையாற்றினார் : “முதல் அணுகுண்டு ராணுவத்தளமான ஹிரோஷிமா மீது போடப்பட்டது... நாங்கள் பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்க விரும்பினோம்... ஜப்பான் சரணடைய வில்லையெனில் அழிவிலிருந்து யாருமே அவர்களைக் காப்பாற்ற முடியாது..”

அவர் கூறியது உண்மையல்ல. முழுப் பொய். ஹிரோஷிமாவும் நாகசாகியும் ராணுவத் தளங்கள் அல்ல. ராணுவ நோக்கங்களுக்காக அவை தேர்வு செய்யப்படவும் இல்லை. உண்மையில் மக்களை எச்சரிக்கை செய்யும் துண்டுப் பிரசுரங்களை நாகசாகி மீது ஆகஸ்ட் 10 அன்று (அதாவது குண்டுவீச் சிற்கு மறுநாள்) வீச அமெரிக்கா ஏற்பாடு செய்தது ! (ஜனநாயக காவலர்கள் அல்லவா, நாங்கள் மக்களை முன்கூட்டியே எச்சரிக் கை செய்தோம் என்று காட்டிக் கொள்வதற் காக இதைச் செய்தார்கள். ஆனாலும் உண்மை வெளிவந்துவிட்டது)

ஜப்பானின் தோல்வியை அணுகுண்டு தீர்மானிக்கவில்லை

ஐன்ஸ்டீன் மிகவும் அதிர்ச்சி அடைந் தார். உடனடியாக அவரால் எதையும் எழுத முடியவில்லை. ஒரு வருடம் கழித்து நியூயார்க் டைம்ஸில் அவர் “அதிபர் ரூஸ்வெல்ட் உயிருடன் இருந்திருந்தால் ஹிரோஷிமா மீது அணுகுண்டு போடுவதைத் தடுத்திருப்பார். ரஷ்யா பங்கெடுப்பதற்கு முன்னதாக போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் ஒரு வேளை அது போடப்பட்டிருக்கலாம்... ஜப்பானுக்கு எதிராக அணுகுண்டைப் பயன் படுத்துவதை நான் எப்போதுமே கண்டித்து வந்திருக்கிறேன்...எல்லாவற்றையும் இணைத்துப் பார்த்தால், ஜப்பானின் தோல் வியை அணுகுண்டா நிர்ணயித்தது? இல் லவே இல்லை...அமெரிக்காவின் அணு குண்டு பற்றிய ஆய்வறிக்கை (ருளு ளவசயவநபiஉ bடிஅbiபே ளரசஎநல) அணுகுண்டுகள் ஜப்பா னைத் தோற்கடிக்கவில்லை..1945 மே மாதத் திலேயே ஜப்பானிய சக்கரவர்த்தி எந்த நிபந் தனைகளானாலும் அவற்றை ஏற்று சரண டைவது என்று முடிவு செய்து விட்டார். ஜூலை மாதத்தில் ரஷ்யா மூலமாக சமரச முடிவைத் துரிதப்படுத்தும்படி வலியுறுத்தி னார். ஆனால் அவர் போட்ஸ்டாம் மாநாட்டிற் காகக் காத்திருக்க வேண்டியிருந்தது... அணுகுண்டுகளைப் போட்டிருக்காவிட்டா லும் ஜப்பான் சரணடைந்திருக்கும்” என்று எழுதினார்.

பத்து வருடங்களுக்குப் பிறகு

1954 -ல் வேதியியல், சமாதானம் ஆகிய வற்றுக்காக இரு முறை நோபல் பரிசு பெற்ற லைனஸ் பாலிங்கைச் சந்தித்த போது ஐன்ஸ் டீன் அவரிடம் “என்னுடைய வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய தவறைச் செய்துவிட்டேன்... அணுகுண்டுகளைத் தயாரிக்க வேண்டும் என்று அதிபர் ரூஸ்வெல்ட்டிற்கு கடிதம் எழுதினேன்..அது தவறுதான். ஆனால் ஜெர் மானியர்கள் அவற்றைத் தயாரித்துவிடுவார் கள் என்ற ஆபத்து அப்போது இருந்ததால் என்னுடைய கடிதத்திற்கு ஒரு நியாயம் இருந்தது..” என்றார்.

ஓப்பன்ஹீமர், ஸிலார்ட் உட்பட மான் ஹட்டன் சோதனைத் திட்டத்தில் இருந்த பலர் செனட்டர் மெக்கார்த்தியினால் `அமெரிக் காவுக்குப் பொருந்தாத நடவடிக்கைகளி’ல் ஈடுபட்டார்கள் என்ற காரணத்தின் பேரில் பின்னர் பழிவாங்கப் பட்டார்கள். அவர்கள் கம்யூனிஸ்டுகள் என்றும் சோவியத் யூனிய னோடு அணுஆயுத ரகசியங்களைப் பகிர்ந்து கொண்ட வர்கள் என்றும் குற்றம் சாட்டப் பட்டார்கள்.

வரலாறு நமக்கிட்டிருக்கும் கடமை

ஒரு மர்மநாவலில் வருவது போன்ற திருப்பங்கள், குற்றப் பின்னணி, மனிதநேயம் சிறிதுமற்ற ஏகாதிபத்திய செயல்பாடுகள் எல்லாமாகச் சேர்ந்து வரலாறு சந்தித்திராத மிகப் பெரிய கொடுமை 1945 ஆகஸ்ட் 6, 9 தேதிகளில் நடந்தேறியது. ஹிரோஷிமா-நாகசாகி மக்கள் அனுபவித்த நரக வேதனை கற்பனைக்கெட்டாதது. இந்தக் கொடுமை யைச் செய்த அமெரிக்க வல்லரசு இன்றளவும் உலகத்தில் பொருளாதார ரீதியிலும் ராணுவ ரீதியிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக் கிறது. இராக், ஆப்கானிஸ்தான் தொடர்ந்து வடகொரியா, ஈரான், கியூபா என அது குறி வைக்கும் பட்டியல் நீளமானது. உலக மக்க ளின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப வேண் டிய மாபெரும் கடமை முற் போக்காளர்க ளுக்கும் மனிதநேயர்களுக்கும் இருக்கிறது.

வரலாறு நமக்கிட்டிருக்கும் இந்தக் கட மையை நிறைவேற்ற உறுதி பூணுவோம் !

ஆதாரங்கள் : லியோ ஸிலார்ட், ஐன்ஸ்டீன் பற்றிய இணையதளங்கள்- இதில் உள்ள பல தகவல்கள் நமது தகவல் பெறும் உரிமைச் சட்டம் போன்ற சட்டங்களின் மூலம் பெறப்பட்டவை.

முனைவர் டியார்ஜி - பேராசிரியர் கே.ராஜூ

1 கருத்து:

செங்கொடி மருது சொன்னது…

அருமையான பதிவு ...

ஏகாதிபத்திய வெறியன் அமெரிக்காவின் வல்லரசுத் திமிர் அன்று ஜப்பானிய மக்களைக் கொன்று விட்டது.. இன்று கோடிக்கணக்கான மூன்றாம் உலக நாட்டு மக்களை பலி கொண்டிருக்கிறது ...