திங்கள், 6 ஜூன், 2011

ராம்தேவ்வை கொல்ல சதியா? ஆர்எஸ்எஸ் அரசியல் நாடகம்

ஊழலுக்கு எதிரான மக்களின் உணர்வை மழுங்கடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சமீபத்தில் சமூக சேவகர் அன்னா ஹசா ரேயை உண்ணாவிரதம் இருக்கச் செய்ததன் மூலம், ஊடகங்களைப் பயன்படுத்தி அவரை மகாத்மா காந்தி அளவிற்கு உயர்த்தி மக்களிடையே முன்னிறுத்தியதன் மூலம், ஊழல் எதிர்ப்பு என்பது ஒரு தனி நபர் போராட்டமாக ஒடுக்கப்பட்டது.

ஹசாரேயின் போராட்டத்தை அறுவடை செய்து கொள்ள காங்கிரசும், பாஜகவும் தீவிரமாக முயற்சித் துக்கொண்டிருக்கின்றன. இந் நிலையில், ஊழலுக்கு எதிரான மக்களின் உணர்வை தனது மதவெறி அரசியலுக்கு பயன்படுத்தி, இந்திய அரசியலில் வீழ்ந்து கிடக்கும் மத வாத பாஜகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலுக்கு கொண்டுவரும் நோக் கத்தோடு ஆர்எஸ்எஸ் அமைப்பு, தனது தீவிர ஆதரவாளர்களில் ஒருவரும், யோகா கலையின் மூலம் மக்களிடையே ஓரளவு அறிமுகம் செய்யப்பட்டிருப்பவருமான சாமி யார் ராம்தேவை உண்ணாவிரதத் தில் இறக்கிவிட்டு

அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் ஈடுப்பட நினைத்தபோது அதை முறியடிக்க நினைத்து இரவு 1 மணிக்கு இந்த கையாலகாத காங்கிரஸ் போலிஸ் போக!
இதுதான் சரியான நேரம் என்று ஆர். எஸ்.எஸ் கும்பல் பத்தலுக்கு தீவைக்க.
கலவரத்திற்கு தொடக்கத்தை ஏற்படுத்த இதைப்பயன்படுத்தி ராம்தேவ்வை கொலை செய்துவிட்டு நாடு முழுவதும் கலரத்தை உண்டாக்கும் நோக்கம் தோல்வி அடைந்துவிட.
ராம்தேவ் பொம்பள வேசத்தில் தப்பித்து ஓட
சுமார் 18 கோடியில் போட்ட திட்டம் தோல்வியில் முடிந்துவிட்டது.

இந்நிலையில்

என்னை கொன்று ஒழித்துவிட வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. இதற்காக சதி திட்டம் தீட்டப்பட்டது. டெல்லி போலீசார் என்னை கொல்வதுடன் என் ஆதரவாளர்களையும் அதிக அளவில் கொன்று குவிக்க திட்டமிட்டனர். ஆனால் அது நடைபெறவில்லை.

மின்சார ஜெனரேட்டர்கள் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பெரிய அளவில் மக்களை கொன்று குவிக்கும் நோக்கத்துடன் நடந்து கொண்டனர். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால் தான் நான் சுடிதார் அணிந்து தப்பிச் சென்றேன்.என்று ராம்தேவ் பத்திரிக்கையாளரிடம் புலம்பி உள்ளார்.


கருத்துகள் இல்லை: