ஞாயிறு, 26 ஜூன், 2011

கசக்கப் படும் பூக்கள்..!


அதிகார வெறிபிடித்து 
ஆயுதங்கள் குவித்து 
ஆட்களைக் கொன்று 
இரத்த ஆறு ஓடிடவா .. எங்கள் 
உயிரில் உதித்த 
உதிரத்தில்உருவான
ஆசை அரும்புகளை
அன்பின் மொட்டுக்களை 
இளம் பிஞ்சுகளை .. உங்களின் 
இரக்கமற்ற போரில் 
நாடு பிடிக்கும் ஜோரில் 
நசுங்கும் வாழ்க்கையால் 
பார்வைக் குருடராய் 
பணயம்..வைத்தோமே..!
பிணங்களின் குவியலிலே
பாசம் மற்ந்து 
பரபரப்பாய் உயிர் குடிக்க,
போர்க்களத்தில் ......எங்களின் 
உயிர்ப் பூக்கள்..
அலைந்து திரிந்து 
சுமப்பது ....
உலகம் அறிய, 
உண்மை உணர
உறவை வளர்க்க . 
புத்தகம் அல்லவே.!.உங்களின் 
உயிர் குடிக்கும் 
ஆயுதப் படையில் .
பலியாடாய் பவனி வரும்
பாலகன் நெஞ்சில் 
பாசமும், நேசமும் துளிர்க்குமா..?..உங்கள் 
நாடு பிடிக்கும் 
ஆசைக்கு தீனி போடவோ 
.. நாங்கள் எம் வாரிசை 
கருப்பைக்குள் வைத்து
பொத்தி பாதுகாத்து 
பாரமின்றி சுமந்தது ..!
எம் மக்வு...
துப்பாக்கி சுமக்கவோ?..உங்களின் 
அநியாய குழி பறிப்பில் 
போர்க் களத்தில், 
ஆயுத வியாபாரத்தில் 
அக்கிரமாய் கொழுத்து 
ஆதாயம் கண்டது யார்?
உங்களின் டாலர் குவியலில்
உங்களின் எண்ணெய் கிடங்குகளில்
மணப்பது.. 
ஈராக் குழந்தைகளின் குருதியா? 
இலங்கை மலர்களின்..சுவாசமா?
சோமாலிய சிசுக்களின் சதையா




                 உலகில் குழ்ந்தைகளைப் பயன்படுத்தும் நாடுகள்
உலகம் முழுவதும் இராணுவமும், எல்லைத்தகராறும், சண்டைகளும் போர்களும் நடந்து கொண்டே இருக்கின்றன. இராணுவத்தில் பெரியவர்கள் மட்டுமல்ல, சிறார்களும் இருக்கிறார்கள், அதுவும் 7 வயதுக்கு குறைவாய் உள்ள பாலகர்களும்..! 50 நாடுகள் குழந்தைகளை இராணுவத்தில் சேர்த்து போரில் ஈடுபட வைத்துள்ளனர். பெரியவர்களை வைத்து பராமரிப்பதைவிட, குழந்தைகளை கையாள்வது எளிது..! குறைந்த பொருளாதார செலவு..! குழந்தைகள் கவலையே படாமல், விளையாட்டாய் உயிர் குடிப்பார்கள்..! 2007 ம் ஆண்டு கணக்குப்படி, 3 ,00 ,000 குழந்தைகள் போரில் ஈடுபடுத்தப் படுகின்றனர்

கருத்துகள் இல்லை: