புதன், 6 ஜூலை, 2011

லோக்பால்: மார்க்சிஸ்ட் கட்சி நிலைபாடு

அறிமுகம்

கடந்த சில ஆண்டுகளாக அம்பல மாகிவரும் மோசடிகளால் ஊழல் என்பது மக்கள் மத்தியில் கவலைப்படும் விஷய மாக உருவாகியுள்ளது. கோடிக்கணக் கான மக்கள் கொடும் வறுமை, பட்டினி மற்றும் சமூகப் பொருளாதார வாய்ப்புகள் இல்லாமை ஆகியவற்றால் துயருற்றிருக்கும் நிலையில் உள்ள இந்தியா போன்ற நாட்டில், ஊழல் மூலம் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் குற்றம் மிகவும் கடுமையானதாகும். பொருளாதார வளர்ச்சி குறைந்துவரும் வேளையில், ஊழல் மூலம் செல்வத்தைக் குவிப்பது சமச்சீரற்ற நிலையை விரிவுபடுத்துவ தோடு, சமூகத்தின் ஒழுக்கக் கட்டமைப் பைத் தகர்க்கவும் செய்கிறது.

அண்மையில் அம்பலப்படுத்தப்பட்ட 2ஜி அலைக்கற்றை வழக்கு, காமன் வெல்த் மோசடி ஆகியவை, மக்கள் பணத்திலிருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை பெரும்நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களில் ஒருபகுதியினர் சட்டவிரோதமாகக் கைப்பற்றிக் கொண்டதைக் காட்டின. இதைவிட மோசம் என்னவென்றால், நீதி கிடைப்பதைத் தடுக்கும் வகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அமைச்சர் பதவியில் மாதக்கணக்கில் நீடிக்க அனு மதித்ததோடு, விசாரணைகளை தடம் புரளச் செய்யவும் வாய்ப்பளிக்கப்பட்டது. உயர்மட்டங்களில் ஊழல் என்பது பல ஆண்டுகளாக நமது அரசியல் அமைப் பில் இருக்கும் அம்சம்தான் என்றாலும், அரசின் உயர்மட்டங்களில் கொள்கை முடிவு எடுக்கும் நடைமுறையை மீறு வது தாராளமயக் காலகட்டத்தின் போக் காக உருவெடுத்துள்ளது. பெரும்முதலாளிகள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோருக்கு இடையி லான கூட்டு பெரிதாக உருவெடுத்து, ஜன நாயகத்தையே முடக்கும் அளவுக்கு மிரட்டி வருகிறது. தற்போதைய பொருளா தார ஆட்சிமுறை நமது அமைப்பை, குற்றங்களுக்கும் வேண்டியவர்களுக்கு ஆதாயம் செய்யும் மோசடித்தனத்திற்கும் சாதகமாக மாற்றியுள்ளது.

ஊழலுக்கு எதிரான போராட்டம், இன் றைய தினத்தில் மிகவும் வலுவாக இருக்க வேண்டியுள்ளது. இதை, நமது அரசியல், சட்ட, நிர்வாக மற்றும் நீதித் துறைகளில் ஒரு சில இடைக்கால ஏற் பாடுகளைச் செய்வதன் மூலம் மட்டுமே சாதித்துவிட முடியும் என்று எண்ண முடியாது; மாறாக ஒருங்கிணைந்த சீர் திருத்த நடவடிக்கைகளை செய்வதன் மூலமே சாதிக்க முடியும். லோக்பால் என்ற அமைப்பை உருவாக்கு வது அத் தகைய நடவடிக்கைகளில் ஒன்றாகும். இதற்குத் துணையாக மற்ற நடவடிக்கை களும் எடுக்கப்பட வேண்டும். குடிமக்க ளின் குறைதீர்க்கும் அமைப்பு ஒன்று சட்டரீதியாக உருவாக்கப்பட வேண்டும். நீதித்துறையின் உயர்மட்டத்தை மேற் பார்வை செய்ய தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். ஊழலுக்கு வழிவகுக்கும் மற்றொரு செய லான தேர்தலில் பணபலத்தைப் பயன் படுத்துவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியம். வரி கட்டாமல் இருந்து கொள்ளும் வசதி யுள்ள இடங்கள் மற்றும் வெளிநாடுக ளில் உள்ள வங்கிகள் ஆகியவற்றில் கொட்டி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை வெளிக்கொணரவும், வரி வசூலில் உள்ள ஓட்டைகளை அடைக் கவும் சீர்திருத்த நடவடிக்கைகளை அவசரமாகக் கொண்டு வர வேண்டும். பெரு முதலாளிகள்-அரசியல்வாதிகள்-அதிகாரிகளின் கூட்டை உடைக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அமைப்பு ரீதியாக முழுமை யாக மேற்கொள்ளப்படும் சீர்திருத்தமே ஊழலை வலுவாகத் தடுக்க முடியும்.

லோக்பால் மசோதா

உலகின் பல நாடுகளில் இருக்கும் ‘விசாரணை அதிகாரி’ என்ற அமைப்பை உருவாக்கும் பணி, ஊழல் மற்றும் அரசுப் பதவியைத் தவறாக பயன்படுத்துவது ஆகியவை குறித்த மக்களின் குறை களைத் தீர்க்க வாய்ப்பளித்துள்ளது. ஆனால், கடந்த நாற்பதாண்டுகளாக லோக்பால் மசோதா இந்திய நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்பது, ஊழலை ஒழிக்க போதிய அரசியல் உறுதி இல்லாததையே காட்டுகிறது. கடந்த காலத்தில் பல்வேறு அரசுகள் இந்த விஷயத்தைக் கையில் எடுத்துவிட்டு, பின்னர் பல காரணங் களைச் சொல்லிக் கிடப்பில் போட்டு விட்டன. தொடர்ந்து அம்பலமாகியுள்ள மோசடிகளால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இதனால் தற்போதைய அரசும் இந்த மசோதா குறித்த விவாதத்தை துவக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. உயர்மட்டங் களில் நடக்கும் ஊழலை விசாரிக்க லோக்பால் மசோதாவை வரும் நாடாளு மன்றக்கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வேண்டியது அவசியமானதாகும்.

லோக்பால் என்பதன் பங்கு மற்றும் அதன் செயல்பாடு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது பற்றிய விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், லோக்பாலை அமைப்பது குறித்து தனது நிலைபாட்டைத் தெளிவு படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.

ஊழல் என்பதன் விளக்கம்





லஞ்சம், சில்லரைக் குற்றங்களை ஊக்குவித்தல், சுயநலத்திற்காக சலுகை கள், வேண்டியவர்களுக்கு தாராளம், தேர் தல் முறைகேடு, கையாடல், அதிகாரி களுக்கு லஞ்சப்பணம் மற்றும் திட்டமிட்ட குற்றங்களில் பங்கேற்பு என்று பல்வேறு வகையான நடவடிக்கைகள் ஊழல் என்று அழைக்கப்படுகிறது.

1988 ஆம் ஆண்டில் கொண்டு வரப் பட்ட ஊழல் தடுப்புச்சட்டம், ஊழல் நட வடிக்கைகளுக்குள் வரும் குற்றங்கள் எவை என்பதை வரையறுத்துள்ளது. இது மேலும் விரிவாக்கப்பட வேண்டியிருக் கிறது. தனிப்பட்ட லாபத்துக்கு அல்லது வளப்படுத்திக் கொள்வதற்கு அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான தொடர்பு என்பது, ஊழல் பற்றிய மிகவும் குறுகிய வரம்புக்குட்பட்ட புரிதலாகவே உள்ளது. பல வழக்குகளில், தனியார் நிறுவனத்தின் லாபத்திற்காக அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி ஒரு நபராக அந்த நிறுவனம் கருதப்பட மாட்டாது. பல சமயங்களில் லஞ்சம் மற்றும் கையாடல் களைக் கண்டுபிடிக்க முடியாமலேயே போயிருக் கும். ஆனால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கும். மக்களின் நம்பிக் கை தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக் கும். எடுத்துக்காட்டாக, தெரிந்தே அதி காரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பொதுத் துறை நிறுவனங்களை விற்கின்றனர்.

ஊழல் என்பதன் விளக்கம் மேலும் விரிவாக்கப்பட வேண்டும். “தெரிந்தே, நியாயமில்லாத லாபத்தை ஒரு நப ருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தரு வது அல்லது சட்டங்களை மீறி நியாய மில்லாத லாபத்தை எந்தவொரு அரசு ஊழியரிடமிருந்து பெறுவது” என்பதை யும் அதில் சேர்க்க வேண்டும்.

செயல்பாடுகள் பற்றிய தெளிவு

லோக்பால் என்பது அடிப்படையில் புகார்களைப் பெறுகிற, அதை விசாரிக் கிற, அதுகுறித்து சோதனை நடத்துகிற ஒரு உண்மை அறியும் குழுவாக இருக்க வேண்டும்; மேலும், ஒருஊழல் வழக்கில் பூர்வாங்க ஆதாரம்இருக்குமானால் அது குறித்து விசாரணை நடத்தவும், ஒரு குறிப் பிட்ட காலவரையறைக்குள் தண்டனை வழங்கவும் வகை செய்யும் விதத்தில் சிறப்பு நீதிமன்றங்களுக்கு அந்த வழக்கு களை அனுப்பிவைப்பது என்ற பணி யையும் செய்ய வேண்டும். தானாகவே முன் வந்து விசாரணைகளுக்கு பரிந் துரைக்கும் அதிகாரம் லோக்பாலுக்கு இருக்க வேண்டும். ஊழல் வழக்குகள் தொடர்பாக மத்தியில் உள்ள ஒட்டு மொத்த அரசு எந்திரத்தையும் லோக்பால் தான் மேற்பார்வை செய்ய வேண்டும். இறு தியாக, நிர்வாக ரீதியான நடவடிக்கைக ளுக்கு பரிந்துரைக்கும் அதிகாரம் இருக்க வேண்டும். அந்தப் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால், நீதிமன்றங் களை நாடுவதற்கான வாய்ப்பும் இருப்பது அவசியம். சுயேச்சையான, பொறுப்புடன் கூடிய வெளிப்படையான மற்றும் கால வரம்புக்குள் உள்ள செயல்பாடுகளைக் கொண்ட அமைப்பாக இயங்க, குறிப்பி டத்தக்க சட்ட அதிகாரங்களும், சுயாட்சி யும் கொண்டதாக லோக்பால் இருக்க வேண்டும்.

நாடாளுமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித் துறை ஆகியவற்றின் அதிகாரங்களை தனித்தனியாகப் பிரித்து வைத்திருப்பது அரசியல் சட்டத்தின் அடிப்படையான அம்சமாகும். லோக்பாலின் செயல்பாட் டில் ஒரு விஷயத்தைப் பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. ஊழல் விவ காரத்தை இது கையாளுமா அல்லது குறைதீர்க்கும் பணியையும் சேர்த்து செய் யுமா என்பதுதான் அது. இந்த இரண்டு பணிகளையும் தனியாகப் பிரிக்க வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கருதுகிறது. குறைதீர்க்கும் பணிக்கு தனியான ஏற்பாடு இருக்க வேண்டும். தனியாக சட்டம் இயற்றி இதை அமைக்க வேண்டும். மக்கள் சாசனம் பற்றிய குடிமக்களின் குறைகள் போன்றவை இதன்கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

தேர்வு மற்றும் லோக்பால் உறுப்பினர்கள்

லோக்பால் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறை தெளிவான தாகவும், திறமை, அனுபவம், தகுதி ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படையானதாகவும் லோக்பால் சட்டம் இருக்க வேண்டும். அரசு நிர்வா கத்தைச் சேர்ந்தவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதித்துறையின் உயர்மட் டத்தில் உள்ளவர்கள், நீதிபதிகள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரைக் கொண்ட விரிவான ஒன்றாக தேர்வுக்குழு அமைய வேண்டும். தேர்வுக்குழு உறுப்பினர் களைப் பரிசீலனை செய்யும் குழுவும் விரிவானதாக இருக்க வேண்டும்.

லோக்பால் அமைப்பு : ஒரு தலைவர் மட்டுமின்றி, லோக்பாலில் பத்து உறுப் பினர்கள் இருக்க வேண்டும். இதில் நான்கு பேர் நீதித்துறையைச் சேர்ந்தவர் களாகவும், மூன்று பேர் நிர்வாகத்துறையி லிருந்தும் (அவர்களுக்கு மத்திய குடி யாண்மைத்துறை அனுபவப்பின்னணி இருக்க வேண்டும்), எஞ்சிய மூன்று பேர் சட்டம், கல்வி மற்றும் சமூகப்பணி ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களாவும் இருக்க வேண்டும். அதில் அரசியல்வாதிக்கு இடம் இல்லை என்பதைப்போல வர்த்த கம் மற்றும் தொழில்துறையைச் சேர்ந் தவர் யாருக்கும் அதில் இடமளிக்கக் கூடாது.

நீதித்துறை

உயர்மட்டத்தில் உள்ள ஊழலைத் தடுக்க வேண்டும் என்பதற்கு முன்னு ரிமை அளிக்க வேண்டும் என்றாலும், சாதாரண குடிமகனைப் பொறுத்தவரை, அன்றாடம் சந்திக்கும் ஊழல் மற்றும் அரசு நிர்வாகத்தின் லஞ்ச லாவண்யம் ஆகியவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் முக்கிய மானதாகும். இத்தகைய லஞ்ச லாவண் யத்தில் பெரும்பாலானவை மாநில அரசு அதிகார மட்டத்தில்தான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. லோக்பாலைப் போல கொண்டுவரப்பட்ட லோக்ஆயுக்தாக் களின் கீழ் மாநில அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். மேலும், தனியாக கொண்டு வரப்பட வேண்டும் என்று எங்களால் வலியுறுத்தப்பட்டுள்ள குடிமக்கள் குறைதீர்ப்பு அமைப்பு, அனைத்து அடிப்படை சேவைகள் மற்றும் குடிமக்களின் உரிமைகள் குறித்த குறைகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அ) பிரதமர் : போதிய பாதுகாப்பு ஏற் பாடுகளோடு, லோக்பாலின் வரம்பிற்குள் பிரதமர் கொண்டுவரப்பட வேண்டும். அனைத்து பொது சேவை ஊழியர் களோடு பிரதமர் பதவியும், 1989 ஆம் ஆண்டில் வி.பி.சிங் தலைமையிலான அரசு பதவியிலிருந்தபோது லோக்பா லின் வரம்புக்குள் கொண்டுவரப்பட்டது. அதைத்தொடர்ந்து வந்த அனைத்து முன்மொழிவுகளிலும் பிரதமர் லோக் பாலின் கீழ் கொண்டு வரப்பட்டார். 2001 ஆம் ஆண்டு லோக்பால் மசோதாவை பரிசீலனை செய்யும்போது அப்போதைய நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியே இதைக் குறிப்பிட்டார். 1989 ஆம் ஆண்டிலிருந்து முதன்முறையாக, ஏராளமான ஊழல் விவகாரங்களில் மூழ்கியுள்ள அரசு இந்த ஊழல்களுக்கு நாட்டின் உயர் நிர்வாக அலுவலகத்தை பொறுப்பேற்கச் செய்வதில் மறுப்பு தெரிவித்து வருகிறது. ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வரும் பிரதமர் உள்ளிட்டு மத்திய அரசின் அனைத்து ஊழியர்களும் லோக்பாலின் வரம்புக்குள் வர வேண்டும்.

ஆ) நீதித்துறை : நீதித்துறையும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, மேலும் பொறுப்புள்ளதாக மாற்றப்பட வேண்டும். முன் அனுமதி வேண்டும் என்கிற கடுமையான விதிமுறை மற்றும் முதல் தகவல் அறிக்கை(எப்.ஐ.ஆர்) பதிவு செய் வதற்கும், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கும் முன்பாக தலைமை நீதிபதியின் ஒப்புதல் தேவை என்பது போன்றவை கிட்டத்தட்ட சட்டரீதியான பாதுகாப்பையே அளித்துள்ளன. ஆனால், அவர்களை லோக்பாலுக்குக் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற முன் மொழிவுகள் அரசியல் சட்டரீதியாக உச்ச நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்திற்கான உத்தரவாதத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளன. கெட்ட நோக்கத் துடன் செயல்படுகிறார் என்கிற வெறும் குற்றச்சாட்டைக் கொண்டு நீதிபதிகளின் செயல்பாடுகளை லோக் பால் விசாரிக்கத் துவங்கினால், எந்தவித அச்சமுமின்றி நீதிபதிகளால் நடந்து கொள்ள முடியாது.

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதி கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், தேசிய நீதித்துறை ஆணையம் என்கிற தனிப்பட்ட அமைப்பால் கையாளப்பட வேண்டும். நீதித்துறையின் உயர்மட்டத் திற்கு நபர்களைத் தேர்வு செய்யும் பணியை இந்த ஆணையம் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படுப வர்களின் நடத்தை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஆணையம் விசாரிக்க வேண்டும். இதற்காக, தேவை யான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். 2010 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட நீதித்துறையின் தரம் மற்றும் பொறுப்பு மசோதா, இந்த நோக்கத்தை நிறை வேற்றப் போதுமானதாக இல்லை.

இ) நாடாளுமன்ற உறுப்பினர்கள் : நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழல் நடவடிக்கைகள் குறித்த விசாரணைக் கான நடைமுறை, இப்போது பலவீன மானதாகவும், திருப்திகரமற்றதாகவும் இருக்கிறது. நாடாளுமன்ற உறுப் பினர்களைப் பொறுத்தவரை, அரசியல் சட்டத்தின் 105வது பிரிவு, வாக்குரிமை மற்றும் பேச்சுரிமை குறித்த பாதுகாப்பை அளிக்கிறது. உண்மையான பிரச்சனை என்னவென்றால், இந்த சுதந்திரமும், பாதுகாப்பும் நாடாளுமன்ற உறுப்பினர் களின் ஊழலுக்கு துணை போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான்.

அரசியல் சட்டச் செயல்பாட்டை பரி சீலனை செய்யும் தேசிய ஆணையம் பரிந் துரைத்துள்ளபடி, 105வது பிரிவைத் திருத் துவதன் மூலம் இதைச் செய்ய முடியும்.

மாற்றாக, வாய்ப்பு இருக்கும் பட்சத் தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் அவர்களின் ஊழலுக்குத் துணைபோகும் வகையில் அமைந்தால், ஊழல் தடுப்புச் சட்டம் மற் றும் இந்திய குற்றவியல் சட்டம் ஆகிய வற்றின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

லோக் ஆயுக்தாக்கள்

மத்தியில் அமைக்கப்படும் லோக் பாலை மாதிரியாகக் கொண்டு மாநிலங் களில் லோக் ஆயுக்தாக்கள் அமைக்க வேண்டும்.

ஊழலை அம்பலப்படுத்துவோருக்கு பாதுகாப்பு

ஊழலை ஒழிக்க, அதை அம்பலப் படுத்துவோருக்கு பாதுகாப்பு தேவை. அவர்களைக் கண்காணிப்பது மற்றும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவது ஆகியவை லோக்பாலின் வரம்புக்கு உட்பட்டதாக அமைய வேண்டும். ஆனால், இதற்கு முழுமையான சட்டரீதி யான ஒப்புதல் தேவை. 2010 ஆம் ஆண் டின் பொதுநலத் தகவல்கள் வெளியீடு (தகவல் பாதுகாப்பு)மசோதா பலப்படுத் தப்பட்டு, அது உடனடியாக சட்டமாக் கப்பட வேண்டும்.

பெரு முதலாளிகள்-அரசு அதிகாரிகள் கூட்டு

ஊழலின் முக்கியமான மூலமாக ஒன்று இருப்பதை உணர்ந்தாக வேண் டிய அவசியம் உள்ளது. பெரு முதலாளி கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஊழல் கூட்டுதான் தாராளமயத்தின் அடிப்படை யாக இருக்கிறது. ஊழல் மோசடி மூலம் உரிமங்கள், பணிகள், குத்தகை மற்றும் ஒப்பந்தங்கள் ஆகியவற்றைப் பெற்றிருந் தால் அவற்றை ரத்து செய்யுமாறு பரிந்துரை செய்ய, பெரும் நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளையும் லோக்பால் விசாரிக்க வேண்டும். அரசு ஒப்பந்தங்கள் மற்றும் உரிமங்கள் பெறுவதிலிருந்து அத்தகைய நிறுவனங் களைத் தடுக்கும் வகையில் அவற்றை கருப்புப்பட்டியலில் சேர்க்கும் அதிகாரம் லோக்பாலுக்கு இருக்க வேண்டும்.

அதேபோல், ஒரு குற்றம் நடந்து, அத னால் பலனடைந்தது நிறுவனமாக இருக்கும்பட்சத்தில், மக்கள் பணத்திற்கு ஏற்பட்ட இழப்பை திரும்பப் பெறும் வகை யில் தீர்மானமான நடவடிக்கைகளை எடுக்க லோக்பாலுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். இந்தப் பரிந்துரைகளை அரசாங்கம் பொதுவாக ஏற்று அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுயேச்சையான லோக்பாலை அமைப் பதற்கான சட்டத்தோடு, ஊழ லுக்கு எதிரான சட்டம் மற்றும் நிர்வாக ரீதியான கட்டமைப்பையும் பலப்படுத்த வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. கீழ்க்கண்டவை அத்தகைய நடவடிக்கைகளாக இருக்க வேண்டும்:

1) நீதித்துறையின் நடவடிக்கையைத் தன்கீழ் வைத்திருக்கக்கூடிய தேசிய நீதித் துறை ஆணையத்தை அமைக்க வேண்டும்.

2) பொதுமக்கள் குறைதீர்ப்புக்கான குடி மக்கள் சாசனத்தைப் பாதுகாக்க சட்டம்.

3) ஊழலுக்கு எதிரான நடவடிக்கை களுக்குக் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்க ளும் வரும் வகையில் அரசியல் சட்டத்தின் 105வது விதியைத் திருத்துதல்.

4) தேர்தலில் பணபலம் விளையாடுவ தைத் தடுக்க தேர்தல் சீர்திருத்தங்கள்.

5) மாநில அளவிலான அனைத்து அரசு ஊழியர்களையும் உள்ளடக்கிய லோக் ஆயுக்தாக்களை மாநிலங்களில் அமைத்தல்.

6) கருப்புப்பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மற்றும் வெளிநாடுகளில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நிதியைப் பறிமுதல் செய்ய வேண்டும்.

தமிழில் : ஹரி

கருத்துகள் இல்லை: