தமிழகத்தில் 1967ல் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு வலுவானதொரு கூட்டணி அமைந்தது ஒரு காரணம்.
அன்றைய காங்கிரஸ் ஆட்சியின் விலை வாசி உயர்வு அலங்கோலங்களைக் கண் டித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் அவரவ ருக்கு உரிய பாணியில் கண்டனப் பொதுக் கூட்டங்கள் முதல் மாநிலந்தழுவிய மறியல் வரை நடத்திய வரலாறுகளைத் தமிழகம் அறியும்.
இன்றைக்கு; அதேபோன்றதொரு விலை வாசி உயர்வைத் தமிழக மக்கள் சந்தித்து சிக் கித் திணறி; சின்னாபின்னமாகிக் கொண்டி ருப்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டிய தில்லை.
இதோ :- உதாரணத்திற்கு ஒன்றிரண்டு பொருட்களின் விலைகள்:-
சென்ற ஆண்டு ரூ.280க்கு விற்ற சமை யல் எரிவாயுவின் தற்போதைய விலைரூ.340/-
கடந்த ஒரு ஆண்டு காலத்தில் ரூ.18, ரூ.19க்கு விற்ற ஒரு கிலோ கர்நாடகப் பொன்னி அரிசியின் இன்றைய விலை ரூ.30/
ரூ.12, ரூ.13க்கு விற்ற செல்லப்பொன்னி ரூ.20.
ரூ.10, ரூ.11க்கு விற்ற ஐ.ஆர்.8, ஐ.ஆர்.20 அரிசிகளின் விலையோ ரூ.19, ரூ.20.
ரூ.60 முதல் 70க்குள்ளிருந்த ஒரு லிட்டர் சுத்தமான நல்லெண்ணையின் இன்றைய விலை ரூ.130/-
ரூ.25 முதல் ரூ.30க்குள்ளிருந்த 1 கிலோ மிளகாய் வத்தலின் இன்றைய விலை ரூ.80/-
ரூ.20 முதல் ரூ.25க்குள்ளிருந்த 1 கிலோ புளியின் இன்றைய விலை ரூ.48/-
ரூ.20 முதல் 25க்குள்ளிருந்த பருப்பு வகைகளின் இன்றைய விலை ரூ.50/-
1 லிட்டர் 12 ரூபாய்க்கு விற்ற பால் விலை தற்போது ரூ.20.
ரூ.3க்கு விற்ற 1 படி உப்பு இன்றைக்கு ரூ.10
ரூ.5க்கு கிடைத்த 1 சலவை சோப்பின் இன்றைய விலை ரூ.10/-
ரூ.9க்கு கிடைத்த 1 குளியல் சோப்பின் இன்றைய விலை ரூ.16/-
ரூ.3 அல்லது ரூ.4க்கு கிடைத்த 1/4 கிலோ கத்தரிக்காயின் விலை இன்றைக்கு ரூ.10/-
1 கிலோ 6 ரூபாய்க்கு விற்ற முட்டைக் கோஸின் இன்றைய விலை ரூ.22/-
1 கிலோ 5 ரூபாய்க்கு விற்ற பீட்ரூட்டின் இன்றைய விலை ரூ.15/-
1 கிலோ 20 ரூபாய்க்கு விற்ற பாகற்காய், அவரைக்காய், பீன்ஸ் போன்ற பச்சைக் காய்கறிகளின் இன்றைய விலை ரூ.40/-
இப்படி இராமாயணத்து அனுமாரின் வால் நீண்டு கொண்டே போவது போல் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தமிழகத்தில் உயர்ந்து கொண்டே போகிறது.
இதையெல்லாம் ஈடுகட்டத்தான் ரேச னில் 1 கிலோ அரிசி 1 ரூபாய்க்குப் போடு கிறோம் என்கிறார் தமிழக முதல்வர்.
1 கிலோ அரிசியை வாங்கி அதனைப் பட் டைத் தீட்ட 1 கிலோவிற்கு 1 ரூபாய் கொடுத்தா லும் ரேசன் அரிசியின் மணமே அலாதிதான்.
அந்த மணத்தைப் பொறுத்துக் கொண்டு சாப்பிடவும் ஒரு தனியான மன உறுதியும் தேவை. மேலும், 1 கிலோ அரிசி 1 ரூபாய்க்கு வாங்கினா லும், அதற்குரிய குழம்பு வைத்துச் சாப்பிட மேலும் 99 ரூபாய் தேவைப்படுகிறது என்பதற்கு அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலைப் பார்த்தாலே புரியும்.
விலைவாசி உயர்வைப் பற்றி அன்றைக்கே பேரறிஞர் அண்ணா அவர்கள் அவருக்கே உரிய அழகு தமிழில் கவிதை எழுதி தமிழக மக்களைத் திரட்டியுள்ளார்.
இதோ; அந்த கவிதை
புளி மிளகாய் தனியா! - இதற்கு
ஏழரை நாட்டு சனியா?
விலை குறைவது எப்போ? - இதை
விளக்கிச் சொன்னால் தப்போ?
மிளகாய் தனியா கூடி - வெளி
நாட்டுக்குப் போனதோ ஓடி?
புளியும் மலடியாச்சோ? - காய்த்துப்
பழுக்க மறந்து போச்சோ?
குழம்பின் மீது ஆவல் - வைக்கக்
கூடாதென்றே மூவர்
அழும்பு எண்ணம் தானோ? - இந்த
அவல நிலையும் ஏனோ?
மக்களின் மீது வெறுப்பா? - இந்த
மூன்றுக்கும் இப்போ சிரிப்பா?
தீக்கதிரில் தமிழக அரசைப் பற்றி எவ்வித விமர்சனமும், கருத்தும் வெளியிடப்பட்டாலும் அதை மறுத்து தனது பாணியில் காவியக் கதைகள் சொல்லி முரசொலியில் மடல் தீட்டும் முதல்வர் நிச்சயம் இதற்கு மறுப்புச் சொல்லமாட்டார் என்று நம்புவோம்.
ஏனெனில், அன்றைக்கு அண்ணா சொன்ன கவிதை இன்றைக்கும் பொருந்து கிறது அல்லவா?
இரா.ஜோதிராம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக