ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009

பணம் என்ன செய்யும் என்று என்னைக் கேட்காதீர்கள்

முதலாளிகளுக்கு
முதுகு சொரியும்
உழைப்பாளியின்
முதுகை ஒடிக்கும் 

பணம் என்ன ?
செய்யும் என்று
என்னைக் கேட்காதீர்கள்!

அம்மாவின் அன்புக்கு
அளவு கொடுக்கும் 
அப்பாவின் பாசத்திற்கு
எல்லை விதிக்கும்.

பணம் என்ன ?
செய்யும் என்று
என்னைக் கேட்காதீர்கள்!

தினம்-வீட்டின் 
மகிழ்ச்சியை தின்பதும்
அமைதியை அனுமதிப்பதும் 
அதன் உண்மையான குணம்.

பணம் என்ன ?
செய்யும் என்று
என்னைக் கேட்காதீர்கள்!

பசியால் நான் 
தெரு நாய்யைபோல்
சாவதை
சத்தம்போட்டு ரசிக்கும்.

பணம் என்ன ?
செய்யும் என்று
என்னைக் கேட்காதீர்கள்!

நான் விரும்பியது
இதுதான் என்று 
என்னைக்கேட்காமலேயே 
என்மீது தினிக்கும்.

பணம் என்ன ?
செய்யும் என்று
என்னைக் கேட்காதீர்கள்!

என் காதலின் உயிரை
குற்றவுணர்வு இன்றி
கொன்று குவிக்கும் 
நடுத்தெருவில் 
அம்மணமாய் 
அலையவும் விடும்.

பணம் என்ன ?
செய்யும் என்று
என்னைக் கேட்காதீர்கள்!

வக்கற்று
வார்த்தை அற்று
மருத்துவம் பார்க்க
வழியின்றி என் குழந்தை
இறப்பதை பார்த்து 
நீ பிழைக்க 
தெரியாதவன் என்று
சொல்லி சிரிக்கும்.

பணம் என்ன ?
செய்யும் என்று
என்னைக் கேட்காதீர்கள்!

பணத்ததைத் தவிர
ஒட்டும் இல்லை
உறவும் யில்லை 

பணம். பணம் செய்கிறது 
உலகமயமாக்கல்
ஏழையைக் கொள்கிறது.

தயவுசெய்து
பணம் என்ன ?
செய்யும் என்று
என்னைக் கேட்காதீர்கள்!

கருத்துகள் இல்லை: