வெள்ளி, 10 ஜூன், 2011

கறுப்புப்பண திருடர்கள் தப்பிக்க உதவும் கமிட்டிகள்

ஒரு தவறை மூடி மறைக்க வேண்டுமா ஒன்று கல்லைபோடு இல்லனா கமிட்டியைப்போடு என்ற வகையில் தான் இந்திய கமிட்டி நடைமுறை உள்ளது
கமிட்டி மற்றும் ஆய்வுகள் கார ணமாக கறுப்புப்பணம் மீதான நட வடிக்கையை தாமதப்படுத்துவதுடன் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் அதிகாரிகள் தங்களது முறைகேடான நிதியை நிறுவனங்களில் முதலீடு செய்துவிடுகிறார்கள் என ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் கூறினார்.

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பொருளாதார ஆய்வு மையத்தின் தலைவராக உள்ள அருண்குமார் கூறுகையில், கறுப் புப் பணம் குறித்து கூடுதல் ஆய்வு கள் அல்லது கமிட்டிகள் அல்லது புதிய விசாரணை பிரிவுகள் அயல் நாட்டு அரசு நிர்வாகங்களுடன் ஒப் பந்தங்கள் ஆகியவை மேற்கொள் வது கறுப்புப் பணம் பதுக்கும் நபர்கள் மீதான நடவடிக்கையை தாமதப் படுத்தும் என்றார்.

அருண்குமார் இந்தியாவில் கறுப்புப் பணம் என்ற புத்தகத்தை யும் எழுதியுள்ளார். கறுப்புப் பணம் மீதான ஆய்வு, கமிட்டி அமைப்பு போன்ற நடவடிக்கைகள் ஏற்படுத் தும் தாமதம் காரணமாக தொழிலதி பர்கள், அரசியல்வாதிகள், பெரும் அதிகாரிகள் தங்களது பணத்தை அயல்நாட்டு நிறுவனங்களில் முத லீடு செய்துவிடுகிறார்கள். ஜார்க் கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் கணக்கில் வராத பணத்தை ஆப்பிரிக்க சுரங்க பணிகளில் முத லீடு செய்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதேக் கருத்துக்களை தேசிய பொதுநிதி மற்றும் கொள்கை இன்ஸ் டிடியூட்டின் பேராசிரியர் இலா பட்நாயக் பிரதிபலித்தார். குற்றவியல் விசாரணை இயக்குநரகம் போன்ற வரி ஏய்ப்பு தொடர்பான குற்றங்களை சோதனை செய்ய வேண்டிய அவ சியம் இல்லை என்றார்.

பல்வேறு தரப்புகளில் இருந்து வந்த நிர்ப்பந்தம் காரணமாக சமீபத் தில் டிசிஐ எனப்படும் குற்றவியல் விசாரணை இயக்குநரகத்தை மத் திய அரசு அமைத்தது. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான தொலைபேசிப் பேச்சுப் பதிவுகள் மூலம், புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல்கள் கிடைக்கின்றன. குற்ற வாளிகளை தண்டிப்பதற்கு இத் தகைய தகவல்களை அரசு பயன் படுத்தலாம் என பேராசிரியர் அருண்குமார் கூறினார்.

வான்சூ கமிட்டி மதிப்பீட்டின்படி 1970ம் ஆண்டுகளில் 7 சதவீதமாக இருந்த கறுப்புப் பணம் 21 சதவீதமாக உயர்ந்தது என சங்கர் ஆச்சார்யா கமிட்டி தெரிவித்தது. ஆனால் சமீ பத்திய உலக ஒருங்கிணைப்பு அறிக் கைப்படி கறுப்புப்பண பொருளா தாரம் 50 சதவீதமாக அதிகரித்து விட்டது என்றும் அருண்குமார் கூறினார்.

கடந்த 60 ஆண்டுகளில் டஜன் கணக்கான கமிட்டிகள் பல்வேறு கோணங்களில் கறுப்பு பணத்தை ஆய்வு செய்து ஆயிரக்கணக்கான ஆலோசனைகளை அளித்தன. நூற்றுக்கணக்கான பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன. ஆனால், கறுப்புப்பணப் பொருளாதாரம் குறிப் பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டிலும், நாட்டிற்கு வெளியே யும் உள்ள கறுப்புப்பணபுழக்கம் குறித்து அரசு ஆய்வு மேற்கொண் டுள்ளது. இந்த ஆய்வினை பயன் பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் கான தேசியக் கவுன்சில் மற்றும் தேசிய நிதி நிர்வாகம் இன்ஸ்டிடி யூட் இணைந்து நடத்தின.

கருத்துகள் இல்லை: